states

அசாம் மாநிலத்தில் வன்முறை பதற்றம்

அசாம் மாநிலத்தில் வன்முறை பதற்றம்

பாஜக ஆளும் அசாம் மாநி லத்தின் துப்ரி பகுதியில் உள்ள அனுமன் கோவிலின் மீது ஜூன் 7ஆம் தேதி மர்ம நபர்கள் பசு மாட்டு தலையை வீசிச் சென்றதாகவும், அடுத்த நாள் மீண்டும் ஒரு பசுவின் தலை கோவிலின் முன் கிடந்ததாகவும் செய்திகள் வெளியாகின.  இந்த சம்பவத்திற்குப் பின் கோவி லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்து -  முஸ்லிம் மக்களிடையே பதற்றமான சூழல் நிலவியது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் ஜூன் 9 ஆம் தேதி துப்ரி நகரத்தில் தடை உத்தரவை பிறப் பித்தது. இருப்பினும் நிலைமை சரியான தும் மறுநாளே அவை விலக்கிக்கொள் ளப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அப்பகுதிக்குச் சென்ற அசாம் பாஜக முதலமைச்சர் ஹிமந்தா  பிஸ்வ சர்மா நிலைமையை ஆய்வு செய்து,“இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களை நிகழ்த்துவோரை கண்டதும் சுட வேண்டும்” என காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.  இதனை தொடர்ந்து துப்ரி மாட்டி றைச்சி சம்பவம் தொடர்பாக இரவு முழு வதும் 38 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அசாமில் கடந்த 24 மணிநேர மாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.