states

img

‘அம்பேத்கர்’ கருத்தரங்கில் பாஜக தலைவரா? மாணவர்கள் எதிர்ப்பால் நிகழ்ச்சியே ரத்து!

புதுதில்லி, ஏப். 15 - டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கத்தில், பாஜக தலைவர் பேசுவதற்கு, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்ட சம்பவம் நடந்துள் ளது. தில்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட லேடி ஸ்ரீராம் கல்லூரியின் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிரிவின் சார்பில் “அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட அம்பேத்கர்” என்ற தலைப்பின் கீழ்  நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. சிறப்புப் பேச்சாள ராக பாஜக-வின் செய்தித் தொடர் பாளர் குரு பிரகாஷ் பஸ்வான் அழைக்கப்பட்டிருந்தார். இது மாண வர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. அம்பேத்கரின் சிந்தனை களுக்கு முற்றிலும் விரோதமான,. விளிம்புநிலை மக்களுக்கு எதிரான மற்றும் சாதிய, வகுப்புவாத கட்சி யான பாஜக-வின் செய்தித் தொடர் பாளர் அம்பேத்கர் பற்றி பேசு வதா? என்று கேள்வி எழுப்பிய மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) தலைமையில் தங்களின் கடும் எதிர்ப்பு தெரிவித்த னர். போராட்டக்களத்தில் இறங்குவோம் என்றும் எச்சரித்த னர். இதையடுத்து, பாஜக செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பஸ்வா னுக்கு விடுத்திருந்த அழைப்பை ரத்து செய்ததுடன், கருத்தரங்க நிகழ்வையே லேடி ஸ்ரீராம் கல்லூரி கைவிட்டுள்ளது.  இதனைக் குறிப்பிட்டு, “கல்லூரி யின் பட்டியல் வகுப்பினர் - பழங்குடியினர் துறை இந்த நிகழ்வை கைவிட்டதை நல்ல நகர்வாக பார்க்கிறோம்” என்று இந்திய மாண வர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், “லேடி ஸ்ரீராம் கல்லூரி நிர்வாகத்தின் முடிவு தனக்கு அதிர்ச்சியளிப்பதாக” குரு பிரகாஷ் பஸ்வான் கூறியுள்ளார். “நான் பாஜக வில் இருப்பது தவறா?; அதற்காகத் தான் எனது குரல் தடுக்கப்படு கிறதா?” என்று புலம்பலை வெளிப்படுத்தியுள்ளார்.