states

img

பாஜக தலைவர்களுக்கு வருண் காந்தி சூடு

புதுதில்லி, டிச.28- பகலில் ஊரையே கூட்டி பேரணி, பிரச்சாரம் நடத்தி விட்டு, இரவில் மட்டும் ஊரடங்கு போட்டுவிட் டால், ஒமைக்ரான் தொற்று கட்டுப் படுத்தப்பட்டு விடுமா? என்று உ.பி. பாஜக தலைவர்களுக்கு, அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி. வருண் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைக்காலமாகவே, வருண்காந்தி தொடர்ந்து பாஜக அரசை விமர்சனம் செய்து வரு கிறார். லக்கிம்பூரில் பாஜக தலை வர்கள், விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்றபோது, குற்றவாளி களை (ஒன்றிய உள்துறை இணை யமைச்சர் அஜய் மிஸ்ரா, மகன் ஆசிஷ் மிஸ்ரா) கைது செய்தே ஆக வேண்டும் என்றும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தபோது, உண்மையிலேயே விவசாயி களின் இறப்புக்கு பிரதமர் கண்ணீர் வடிக்கிறார் என்றால், உயிரிழந்த ஒவ்வொரு விவசாயியின் குடும் பத்திற்கும் தலா ரூ. 1 கோடி இழப் பீடு வழங்க வேண்டும் என்றும் பேசி வருண் காந்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 ஒமைக்ரான் பரவலைக் கட்டுப் படுத்தும் வகையில் உத்தரப்பிர தேசத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டி பாஜக தலைவர் களை சாடியுள்ளார். “இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு பகலில் லட் சக்கணக்கானோரை ஒருங்கி ணைத்து பேரணி நடத்துவது என் பது சாமானியனின் புரிதலுக்கு அப் பால் இருக்கிறது” என்று டுவிட்ட ரில் அவர் பதிவிட்டுள்ளார். “இப் போதைய சூழலில் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்துதல் அல்லது தேர்தல் பலத்தை நிரூ பித்தல். இந்த இரண்டில் எது முக்கி யம் என்பதை உறுதி செய்ய வேண் டும்” என்றும் பாஜக தலைவர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். “பெரும்பாலான தொற்று பர வல்கள் பகலில்தான் நடக்கின்றன. இரவில் மக்கள் நடமாட்டம் குறைவு தான்” என்றும் அவர் குறிப்பிட்டுள் ளார்.