states

img

ரஷ்ய எண்ணெய்யை வாங்குகிறது இந்தியா

புதுதில்லி, மார்ச் 19- உக்ரைன் போரைக் காரணம் காட்டி ரஷ்யா மீது அமெரிக்கா வரலாறு காணாத தடைகள் விதித்துள்ள போதிலும், ரஷ்யாவுடனான உலக நாடுகளின் வர்த்தகத்தை எந்தவிதத்திலும் அந்த தடைகளால் தடுத்து நிறுத்த முடிய வில்லை. ரஷ்யாவிடமிருந்து 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய்யை வாங்கு வதற்கு இந்திய பொதுத்துறை    எண் ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள் ளன. இந்திய நிறுவனங்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளின் பல முக்கிய எண்ணெய் நிறுவனங்களும் ரஷ்யா வுடனான உறவை துண்டிப்பதல்ல, மாறாக மேலும் ஆழப்படுத்தவே முடிவு செய்துள்ளன. ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியம் இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்று இந்தியா. உக்ரைன் போர் காரண மாக அமெரிக்கா விதித்துள்ள தடை களால் ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற் கொள்ளும் நாடுகள் மற்றும் நிறுவனங் கள் மீதும் அந்த தடைகள் பாயும் என்ற அபாயம் உருவாக்கப்பட்டிருக்கி றது. எனினும், அதை மீறி ரஷ்யாவுட னான வர்த்தக உறவை பல நாடுகள் தொடர்கின்றன. அந்த நாடுகளுடன் டால ரில் அல்லாமல் சொந்த நாணயத்தி லேயே வர்த்தகத்தை மேற்கொள்வதற் கான நடவடிக்கைகளை ரஷ்யா துவக்கி யுள்ளது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்களில், மேற்கண்ட தடைகள் காரணமாக சில பெரிய நிறுவனங்கள் ரஷ்யாவிடமி ருந்து எண்ணெய் இறக்குமதி செய் வதை தற்காலிகமாக தவிர்த்துள்ளன. அமெரிக்காவை மையமாக கொண்ட அந்த நிறுவனங்களின் வர்த்தக நலன் களே அதற்கு காரணம். இந்தப் பின்னணியில், ரஷ்ய அரசு எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண் ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்  கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய வற்றை தள்ளுபடி விலையில் தர தயா ராகியுள்ளன. இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்வது என இந்திய பொதுத் துறை பெட்ரோலிய நிறுவனங்களான இந்திய ஆயில் கார்ப்பரேசன், இந்துஸ் தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் மற்றும் மங்களூரு பெட்ரொ கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆகியவை முடிவு செய்துள்ளன. இதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகள் இருந்த போதிலும், ரஷ்ய சந்தையில் விலை குறைவாக கிடைக் கும் எண்ணெய்யை வாங்குவது கொள்கை முடிவாக ஆக்கப்பட்டுள்ளது என இந் திய எண்ணெய் நிறுவனங்களின் தலை வர்கள் கூறியுள்ளனர்.

குறைந்த விலையில்...

இதில் 2 முக்கிய அம்சங்கள் உள் ளன. ஒன்று, தற்போதைய போர் சூழலை பயன்படுத்தி வாங்கப்படும் கச்சா எண் ணெய் பேரல் ஒன்றுக்கு வெறும் 20 முதல் 25 டாலர் அளவிற்கு ரஷ்யாவிடமிருந்து கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட் டுள்ளது. கடந்த வாரம் 30 லட்சம் பேரல்களை ரஷ்ய அரசு எண்ணெய் நிறு வனமான ரஷ்யன் யூரல்ஸ் நிறுவனத்திட மிருந்து அதன் ஐரோப்பிய வர்த்தக கழ கமான வைட்டல் நிறுவனம் வாயிலாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் வாங்கி யிருக்கிறது. இந்த நிலையில் மேலும் 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் யை இந்திய நிறுவனங்கள் வாங்கு வதற்கு ஆர்டர் செய்ய முடிவு செய்துள் ளன. இதனால் மிகக் குறைந்த விலைக்கு இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறு வனங்களுக்கு ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள் ளது. எனினும் இந்தியாவில் மோடி அரசு பெட்ரோலிய விலையை குறைக்குமா என்பது தெரியவில்லை. இதில் மற்றொரு முக்கிய அம்சம், இந்தியாவின் மிகப் பெரிய தனியார் கார்ப்பரேட் பெட்ரோலிய நிறு வனங்கள், குறிப்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ரஷ்யாவிட மிருந்து மிகக் குறைந்த விலையில், கச்சா எண்ணெய் கிடைக்கும் என்று தெரிந்த போதிலும், அதை வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளது. ஏனென் றால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெரு வாரியான வர்த்தகம் சார்ந்த உறவுகள் அமெரிக்காவை மையப்படுத்தியதாக உள்ளன. எனவே, அமெரிக்காவின் தடை உத்தரவுகளை, இந்திய அரசே மீறத் துணிந்தபோதிலும், ரிலை யன்ஸ் முதலாளி மீற தயாராக இல்லை. ரஷ்யாவுடன் பேரம் மேற்கொண்டால் அமெரிக்காவை மையப்படுத்தி இயங் கும் தனது நிறுவனங்கள் முடக்கப்பட லாம் என்ற அச்சம் ரிலையன்ஸ் குழு மத்தை சூழ்ந்திருப்பதுதான் இதற்கு காரணம்.

ஆனால், இந்திய பொதுத்துறை நிறுவனங்களான ஐஓசி, எச்பிசிஎல் உள்ளிட்டவை, இந்திய மக்களின் நிறு வனங்களாக இருப்பதால் அமெரிக்கத் தடையை பற்றி அவை கவலைப்பட வில்லை. அதுமட்டுமல்ல, ரஷ்யாவுட னான இந்திய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் வர்த்தக  உறவு மிகவும் ஆழமானது. கடந்த ஆண்டு கூட ரஷ்யாவின் எரிசக்தி பொதுத்துறை கார்ப்பரேட் நிறுவனமான காஸ்பரோமுடன் இந்தியாவின் ஓஎன்ஜிசி, ஐஓசி ஆகியவை முக்கிய உடன்பாட்டை மேற்கொண்டன. சமீப ஆண்டுகளாக இந்தியா - ரஷ்யா இடையே எண்ணெய் வர்த்தக உறவுகள் மிகவும் வலுப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மிரட்டல்

இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து தடைகளை மீறி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கக் கூடாது என அமெரிக்கா அதிகாரப்பூர்வமற்ற முறையில் மிரட்டல் விடுத்தது. ஆனால் இந்தியாவின் பெட்ரோலியத் துறை ரஷ்யாவின் எண்ணெய்யை பெருமளவு நம்பியிருப்பதால் இந்தப் பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது என்று இநதிய அரசு தரப்பில் கூறப் பட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதற்கு இந்தியா வுக்கு உரிமை இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என, அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் ஆகியவையும் இந்தியாவை வலியுறுத்தியுள்ளன. எனினும் அதை இந்தியத் தரப்பு நிராகரித்துள்ளது. இப்பிரச்சனை தொடர்பாக மார்ச் 19, 20 தேதிகளிலும், மார்ச் 21 அன்றும் மேற்கண்ட மூன்று நாடு களுடன் தனித்தனியாக நடைபெறவுள்ள உச்சி மாநாடுகளில் அந்நாடுகளின் தலைவர்கள், பிரதமர் நரேந்திரமோடியிடம் கேள்வி எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்துள்ள மிக முக்கிய  ஐரோப்பிய நாடுகளே கூட, தாங்களே விதித்த தடைகளை மீறி, இப்போது வரை ரஷ்யாவின் எண்ணெய்யை வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை இந்தியா இந்த தலை வர்களிடம் சுட்டிக்காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகள் தற்போது வரை சற்றும் குறைக்காமல் இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப் போனால், போர் நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள ஐரோப்பிய நாடுகளான போலந்து, லிதுவேனியா, ருமேனியா, பின்லாந்து ஆகிய நாடுகளும பெருமளவு கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிட மிருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றன என்பதை யும் இந்தியா சுட்டிக்காட்டும் என தெரிகிறது.