திருவனந்தபுரம், மார்ச் 31- உயர்கல்வித் துறையில் கேர ளாவுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு அளிக்கும் என சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜூடித் ரேவன் அறிவித்தார். திரு வனந்தபுரத்தில் முதல்வர் பின ராயி விஜயனை சந்தித்தபின் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கேரளா உயர்கல்வியில் அதிக கவனம் செலுத்தப் போகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. உயர் கல்வித் துறையில் சிறந்து விளங் கும் மையங்களை நிறுவுவதற்கான அரசின் நடவடிக்கைக்கு முதல்வர் ஆதரவு கோரினார். 250 சர்வதேச விடுதிகள் இந்த ஆண்டு திறக்கப் படும். பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மாண வர்கள் ஈர்க்கப்படுவார்கள். தர மான கல்வியை உறுதி செய்வ தற்கான கேரளாவின் முயற்சி களுக்கு கல்விசார் ஆதரவு வழங்கப்படும் என்று துணை தூதர் கூறினார். அமெரிக்க உயர் மட்ட ஏஜென்சியுடன் இணைந்து இதை செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். கேரளாவுடன் அதிகாரிகள் மட்டத்தில் நிறைய பேச்சுவார்த்தை கள் நடத்தப்பட்டு வருவதாக தூத ரக அதிகாரி கூறினார். கேரளா வுடனான கூட்டு மேலும் வலுப் பெறும். உக்ரைனில் இருந்து மலை யாளி மாணவர்களை பத்திரமாக அழைத்து வர அரசு மேற்கொண்ட முயற்சிகளை ஜூடித் ரேவன் பாராட்டினார். தலைமைச் செயலா ளர் டாக்டர்.வி.பி.ஜாய் மற்றும் கேரள அரசின் தில்லி அலுவலக சிறப்பு அதிகாரி வேணு ராஜா மணி உள்ளிட்டோர் உடனிருந்த னர்.