உ.பி. தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக தீவிரப் பிரச்சாரம் மேற் கொண்ட பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகாயத், தற் போதைய பாஜகவின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ‘’உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியால் எங்க ளுக்கு இழப்பு ஏதுமில்லை. நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல, நாங்கள் புரட்சியாளர்கள், ஆர்வலர்கள். எனவே, இது எங்களுக்கு வெற்றியோ தோல்வியோ இல்லை” என்று திகாயத் கூறியுள்ளார்.