லக்னோ, மார்ச் 3- உலகின் மிகப்பெரிய பொய்யர்களின் கட்சி என்றால் அது பாஜகதான் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் சாடியுள்ளார். ஜான்பூரில் நடைபெற்ற தோ்தல் பிரச்சா ரக் கூட்டத்தில் அகிலேஷ் மேலும் பேசி யிருப்பதாவது: “கொரோனா தொற்றுப் பரவல் காலங்களில் பாஜக-வின் தவறான நிர்வா கத்தால் மக்கள் கடும் சிரமங்களைச் சந்திக்க நோ்ந்தது. பிற மாநிலங்களுக்குச் சென்றிருந்த தொழிலாளா்கள் பொது முடக்கம் காரணமாக உ.பி.யில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு நடந்தே வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவ்வாறு வரும் வழியிலேயே பலர் உயிரிழந்தனா். கொரோனா பரவல் உச்சம் பெற்ற காலத்தில் போதுமான மருந்துகளையும், படுக்கை வசதிகளையும் கூட உ.பி. பாஜக அரசால் வழங்க முடியவில்லை. அவர் கள் சரியான நேரத்தில் மருந்துகளையும், ஆக்சிஜனையும் அளித்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். கொரோனா தொற்றுக் காலத்தில் ஆட்சேர்ப்புத் தேர்வுகள் நடைபெறாத தால் பல இளைஞர்கள் அதில் கலந்து கொள்ள முடியாமல் வயது வரம்பைத் தாண்டி விட்டனர். விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக் கப்படும் என்று வாக்குறுதி அளித்து கடந்த 2017-ஆம் ஆண்டில் உத்தரப்பிர தேசத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி யது. ஆனால், பாஜக அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகளின் வரு மானம் இரட்டிப்பாகவில்லை. உண்மை யில், அது பாதியாகக் குறைந்துவிட்டது. பாஜக தன்னை உலகின் மிகப் பெரிய கட்சி என்று அழைக்கிறது. ஆனால், அத னுடைய ஐந்தாண்டு கால ஆட்சியில், அந்தக் கட்சி மக்களுக்கு ஆற்றிய பணி களையும், அளித்த வாக்குறுதிகளையும் பகுப்பாய்வு செய்தால், உலகின் மிகப் பெரிய பொய்யர் கட்சி பாஜக-தான் என் பது தெரிய வரும். இவ்வாறு அகிலேஷ் பேசியுள்ளார்.