டேராடூன், டிச.23- உத்தரகண்டில் உள்ள அரசுப் பள்ளியில் தலித் பெண் சமையலர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரி வித்தும், அவர் சமைத்த உணவை தங்கள் குழந்தைகளை உண்ண விடாமல் தடுத்தும், அங்குள்ள உயர்சாதி பெற்றோர், தீண்டாமைக் கடைப்பிடித்துள்ளனர். அதுமட்டுமன்றி, அந்த தலித் பெண் சமையலரை தற்போது வேலை யை விட்டும் நீக்க வைத்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலம், சம்பா வத் மாவட்டத்தில் உள்ள சுகிதாங் கிராமத்தில் அரசுப் பள்ளி உள்ளது.
இங்கு சுனிதா என்பவர் கடந்த நவம்பர் 25 அன்று சமையல் அம்மாவாக (போஜன் மாதா) நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சுனிதா தலித் வகுப் பைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற் காக, அவர் சமைத்த உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிடாதவாறு உயர்சாதி பிரிவைச் சேர்ந்த 40 பெற் றோர் தடுத்துள்ளனர். வீட்டிலிருந்து டிபன் கொடுத்து அனுப்பியுள்ளனர். அத்துடன் நிற்காமல், ‘புஷ்பா பட்’ என்ற பிராமண விதவை இருக்கும் போது, தலித்தான சுனிதாவை எவ்வாறு சமையல் அம்மாவாக நியமிக்கலாம்? என்று தகராறு செய்ததுடன், அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியரையும் மிரட்டியுள்ளனர். இதனால் சுனிதாவை பணியிலி ருந்து நீக்கிய அதிகாரிகள் தற்போது உயர்சாதி பிரிவைச் சேர்ந்த ஒருவரை சமையல் அம்மாவாக நியமித்துள்ளனர்.
இதுதொடர்பான செய்தி தற்போது ஊடகங்களில் வெளியான நிலையில், அது விவாதங்களைக் கிளப்பியுள்ளது. சுனிதாவை சாதிய அடிப்படையில் ஒதுக்கிவைத்த உயர் சாதியினர் மீதும், அவர்களின் நெருக்குதலுக்கு அடி பணிந்த அதிகாரிகள் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. “டிசம்பர் 13 அன்று நான் பள்ளி யில் சேர்ந்தபோது, அனைத்து மாண வர்களும் எந்த பிரச்சனையும் இல்லா மல் சாப்பிட்டனர். ஆனால், மறுநாள் நான் தலித் என்பதால் குழந்தை களுக்கு சமைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டேன். அது மிக வும் அவமானமாக இருந்தது. ஆனால் அவர்கள் (பெற்றோர்கள்) மிகவும் பிடி வாதமாக இருந்தனர். இதனால் தான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்” என்று பாதிக்கப்பட்ட தலித் சமையலர் சுனிதா தனது குமுறலை வெளிப்படுத்தி யுள்ளார்.
சுனிதாவுக்கு இந்த சமையலர் வேலையில் கிடைக்கும் மாதச்சம்பளம் வெறும் 3 ஆயிரம் ரூபாய்தான். தனது இரண்டு குழந்தைகள், நோய் வாய்ப்பட்டு வேலைக்குச் செல்ல முடி யாத நிலையிலிருக்கும் தனது கண வர் ஆகியோரைக் காப்பாற்றுவதற்கா கவே சுனிதா சமையல் அம்மா பணிக்கு வந்துள்ளார். ஆனால், தீண்டாமை என்ற மனநோய் பீடித்த சாதி வெறி யர்கள் அந்த வேலையையும் தற்போது பறித்துக் கொண்டுள்ளனர்.