states

“வல்லுநர் குழுதான் அலங்கார ஊர்தி அணிவகுப்பை தேர்வு செய்கிறது”

புதுதில்லி,ஜன.18- வல்லுநர் குழு தான் அலங்கார ஊர்தி அணிவகுப்பை தேர்வு செய்கிறது என்று ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் மழுப்பலான பதிலை தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது என்று அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இதன்தொடர்ச்சியாக தேசிய விழாக்களில் மாநிலங்களின் பங்கேற்பை யும் புறக்கணித்துள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் தில்லியில் நடைபெறும் அணி வகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு  வினோதமான விளக்கம் அளித்தது. தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட தற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடு தலைக்காகப் போராடிய வ.உ.சிதம் பரனார், மகாகவி பாரதியார்,

விடுதலைப்  போராட்ட வீரமங்கை ராணி வேலுநாச்சி யார், மருது சகோதரர்கள் ஆகியோரின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறு வது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஒன்றிய அரசு, எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை ஒன்றிய  அரசு முடிவு  செய்வதில்லை. நிபுணர் குழுதான் முடிவு செய்தது என்று கூறியது. தமிழகம், மேற்கு வங்காள மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறாது என பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்துவிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் ஊர்தி இடம் பெறாதது ஏன்? என பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழ்நாட்டை சேர்த்து மொத்தம்  29 மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகள் வந்தன. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி முதல் 3 சுற்று வரை தகுதி பெற்றது.   ஆனால் இறுதியான 12 அலங்கார ஊர்திகளில் தமிழகம் தேர்வு செய்யப் படவில்லை. வல்லுநர் குழு தான் அலங்கார  ஊர்தி அணிவகுப்பை தேர்வு செய்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முத லமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது தொடர்பான கடிதத்தை எழுதியுள்ளார்.  ஒன்றிய அமைச்சரின் மழுப்பலான விளக்கம் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

;