2021-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வைரசின் பாதிப்பு குறைந்த பொழுதும் வேலையின்மை பெருந்தொற்றுக்கு முன்பு இருந்ததைவிட அதிகமாக இருந்தது என அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் இரண்டையுமே சிதைக்கின்றன. இந்தியா இளைஞர்களை அதிகம் கொண்ட தேசம் எனும் நன்மை வீணாகிறது. இளம் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. பொது முதலீடுகளை அதிகரியுங்கள்! வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள்!
தொழிற் உற்பத்தி தேக்க நிலையில் உள்ளது என சிஎம்ஐஇ ஆய்வு தெரிவிக்கிறது. பொருளாதார மீட்சி எனும் பொய்யுரை அம்பலம்! இதன் பொருள்: ஆழமான பொருளாதார மந்தம்; வேலை இழப்புகள்; பணவீக்கமும் விலைவாசியும் உயர்வு; மக்கள் மீது மேலும் துன்பங்கள் இதனை தடுக்க பொது முதலீடுகளை அதிகரியுங்கள்! வேலைவாய்ப்புகளை பெருக்குங்கள்! மக்களின் வாங்கும் சக்தியை கூடுதலாக்குங்கள்!
மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்பொழுதும் மக்களுடன் உள்ளது. தேசிய மின்னணு ஊடகங்கள் தமது எல்லையற்ற எஜமான விசுவாசத்தை பறைசாற்ற பாஜக அல்லது திரிணாமுல் காங்கிரஸ் என பேசுகின்றன. பீர்பும் படுகொலைகள் நடந்தவுடன் அந்த இடத்துக்கு முதலில் சென்றது கட்சியின் மாநில செயலாளர் முகமது சலீம் அவர்கள்தான்! காவல்துறை தடுப்பார்கள் என்பதை முன் கூட்டியே அறிந்த அவர் இரு சக்கர வாகனத்தில் காவலர்களுக்கு தெரியாமல் அந்த இடத்தை அடைந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்; நீதி கோரினார்.