states

இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான வன்முறை, பாகுபாடு அதிகரிப்பு!

ஜெனீவா, செப். 14 - அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய தேவை இந்தியாவில் உள்ளது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வோல்கர் டர்க் தெரிவித்தார். ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் 54-வது அமர்வில் பேசிய டர்க், “இந்தியாவில் உள்ள தனது அலுவலகத்திற்கு, ஓரங்கட்டப் பட்ட சிறுபான்மை சமூகங்கள், வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு ஆளாகின்றனர் என்ற தகவல் அடிக்கடி வருகின்றன” என்றும் கவலை தெரிவித்துள்ளார். “முஸ்லிம்களே பெரும்பாலும் இது போன்ற தாக்குதல்களுக்கு இலக்கா கின்றனர். மிக சமீபத்தில் ஹரியானா  மாநிலம் குர்ஹானிலும், வட இந்தியா வில் மணிப்பூரிலும் குறிப்பிட்ட சமூ கங்கள் மே மாதத்திலிருந்து வன்முறை மற்றும் பாதுகாப்பின்மையை எதிர் கொள்கின்றன. 200-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் மற்றும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்” சகிப்பின்மை, வெறுப்பு பேச்சு,  மதத் தீவிரவாதம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றை நேரடியாக கையாள்வ தன் மூலம், அனைத்து சிறுபான்மையி னரின் உரிமைகளை நிலைநிறுத்துவ தற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவ தற்கான தெளிவான தேவை இந்தியா வில் உள்ளது” என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில், மணிப்பூர் பற்றிய ஐ.நா. நிபுணர்களின் கருத்துக் களை இந்தியா கடுமையாக நிராக ரித்தது. அவை ‘தேவையற்றவை, தவறான அனுமானம் கொண்டவை’ என்று கூறியது. வடகிழக்கு மாநிலத்தின் நிலைமை அமைதியாகவே உள்ளது என்று தெரிவித்தது. மணிப்பூரில் நிலவும் சூழ்நிலையை மாற்றவும், அமைதி மற்றும் நல்லி ணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் நீதித்துறை உட்பட அனைத்து மட்டங்களிலும் உள்ள இந்திய அதி காரிகள் நடவடிக்கை எடுத்து வருவ தாகவும் அண்மையில் இந்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையிலேயே, ஐநா மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வோல்கர் டர்க் மேற்கண்ட கருத்துக் களை வெளியிட்டுள்ளார். தண்டனைகளை அதிகரிப்பதற்காக தனது மத நிந்தனைச் சட்டங்களை திருத்துவது குறித்து பரிசீலிக்கும் பாகிஸ்தான் அரசின் முடிவு குறித்து டர்க் கவலை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மையி னரின் அவல நிலையைக் குறிக்கும் வகையில், பைசலாபாத்தில், கும்பலால் நாசப்படுத்தப்பட்ட தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ குவிமாடங்கள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.