states

ஆன்-லைன் வழியில் பட்டப்படிப்பு 900 தன்னாட்சி கல்லூரிகளுக்கு யுஜிசி அனுமதி

புதுதில்லி, பிப்.21-  ஆன்-லைன் வழியில் பட்டப்படிப்பு பயில 900 தன்னாட்சி கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக மானிய குழு (யுஜிசி) அனுமதி வழங்கி யுள்ளது.  விரைவில் நாடு முழுவதும் 900 தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஆன்-லைன் வழியில் இளநிலை மற்றும் முது கலை படிப்புகளில் சேர புதிய விதிமுறை அம லுக்கு வருகிறது. முன்னதாக பல்கலைக்கழ கங்களில் மட்டும் ஆன்லைன் வழி பட்டப்படிப்பு களில் சேரலாம் என்கிற நடைமுறைஇருந்தது.  புதிய கல்விக் கொள்கையின் அடிப்படை யில் 2035ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த புதிய  நடைமுறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. அந்தவகையில் ஆன்லைன் வழி இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும் முதுகலை படிப்புகளில் சேர இளங்கலை படிப்புகளில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் அவசியமாகும். ஆன்-லைன் வழி பட்டப்படிப்புகளை தொடங்குவதற்கு பல்கலைக்கழக மானிய குழுவின் முன் அனுமதியை பெற அவசியம் இல்லை என்றும்  யுஜிசி தெரிவித்துள்ளது.  

எனினும் ஆன்லைன் பட்டப்படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் தேசிய மதிப்பீடு மற்றும்  அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) எனப்படும் தர மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண்களை பெற்றி ருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் கூறுகையில், ஆன்லைன், திறந்தநிலை பல்கலைக்கழகம்  மற்றும் வழக்க மான பட்டங்கள் சம மதிப்புடையதாக இருக்கும். இவை அனைத்தும் அடுத்த 13 ஆண்டுகளில் தேசிய கல்வி கொள்கையின் இலக்குக்கு ஏற்ப இந்தியாவின் மொத்த சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன.  அணுகல், சமபங்கு, தரம், மலிவு மற்றும்  பொறுப்புக்கூறல் ஆகிய 5 தூண்களின் மீது கட்டப்பட்ட தேசிய கல்வி கொள்கை போல, ஆன்லைன் கல்வி சுற்றுச்சூழல் அமைப்பும் உருவாக்கப்படும். புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பானது அனைத்து தன்னாட்சி கல்லூரிகளும் ஆன்லைன் கல்வியை வழங்கு வதை செயல்படுத்துவதாகும். இது கல்வி கற்பவர்களின் எண்ணத்தை மேம்படுத்தும். இந்த ஆன்லைன் பட்டங்கள் எந்தவொரு இயற்பியல் பல்கலைக்கழகத்திலும் பெறப்பட்ட பட்டங்களைப் போலவே இருக்கும்’ என்றார்.