states

img

சேர் மீது ஏறி, உக்கிப் போட்டு மன்னிப்பு கேட்ட பாஜக எம்எல்ஏ!

லக்னோ, பிப்.24- உ.பி. மாநில சட்டப்பேர வைக்கு 7 கட்டங்களாக தேர் தல் அறிவிக்கப்பட்டு, இது வரை நான்கு கட்டத் தேர்தல் கள் நடந்து முடிந்துள்ளன. ஐந்தாவது கட்டத் தேர்தலுக் கான பிரச்சாரம் சூடு பிடித் துள்ளது. முதற்கட்டத் தேர்தலின் போதே, பாஜக எம்எல்ஏ-க்க ளால் தொகுதிக்குள் ஓட்டு கேட்டு செல்ல முடிய வில்லை. பல இடங்களிலும் மக்கள் அவர்களை விரட்டி யடித்தனர். முசாபர் நகர் மாவட்டம் கட்டவுலி தொகுதி பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி பிரச்சாரத்திற்கு சென்ற போது, கிராம மக்கள் அவரை, ஊர் எல்லைவரை சென்று விரட்டியடித்தனர். முன்னா வர் கலானில் என்ற இடத்தி லும் அவர் துரத்தியடிக்கப் பட்டார்.

சைனியைத் தொட ர்ந்து, பாக்பத் தொகுதி பாஜக வேட்பாளர் சஹேந்திர ரமலா, சப்ரவ்ளி கிராமத்தில் கறுப்புக் கொடியேந்திய மக் களால் விரட்டியடிக்கப் பட்டார். சிவல்காஸ் தொகுதி பாஜக வேட்பாளர் மணிந்தர் பால் சிங், சூர் கிராம மக்க ளால் கல்லால் அடித்து துரத் தப்பட்டார். தில்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி நொய்டாவிற்குச் சென்ற போது, மக்கள் அவரிடம் செருப்பைத் தூக்கிக் காட்டி திரும்பிப் போகச் செய்தனர். இந்நிலையில், சோன் பஹ்தர் மாவட்டம், ராபர்ட் கஞ்ச் தொகுதி பாஜக எம்எல்ஏ பூபேஷ் சவுபே, பிரச்சா ரத்திற்கு சென்ற இடத்தில் மக்களின் எதிர்ப்பை சமா ளிக்க முடியாமல், சேர் மீது  ஏறி நின்று கைகளால் காது களை பிடித்தபடி உக்கி  போட்ட சம்பவம் நடந்துள் ளது. “கடந்த ஐந்து ஆண்டு களில், நான் கொடுத்த வாக் குறுதிகளை நிறைவேற்றா மல் விட்டிருந்தாலோ, தவறு செய்திருந்தாலோ தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று உக்கி போட்டபடியே சவுபே மன் னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளி யாகி உள்ளது.