states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திரிணாமுல் எம்.பி., சாகேத் கோகலே

மோடி என்ற மனிதரிடம் அடிப்படையாகவே ஏதோவொரு பயங்கர சிக்கல் இருக்கிறது. அகமதாபாத்  பெருந்துயர நேரத்தில் “லோ ஆங்கிள் ஷாட் (Low-Angle shot)” வடிவத்தில் தன்னை புகைப்படம் எடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தது யார்? மோடி அவர்களே... அவமானம் அடைந்தது போல் ஒருமுறையாவது  நடியுங்கள்.

ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

வெள்ளியன்று காலை இஸ்ரேலின் தாக்குதல் செய்தியில் விடிந்திருக்கிறது. ஈரானின் தலைநகரத்தையும் அணு ஆற்றல் இருக்கும் தளங்களையும் இஸ்ரேல் தாக்கி இருக்கிறது.  இஸ்ரேலின் அடாவடியில் மத்திய கிழக்கு நாடுகளும் உலகமும் மிக மிக ஆபத்தான சூழலில் இருக்கின்றன.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா

விமான விபத்து குறித்து பேசுகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,”விபத்துகளை யாராலும் தடுக்க முடியாது” எனக் கூறுகிறார். “எதையும் தடுக்க முடியாது” என்றால் ஒன்றிய அமைச்சர்களுக்கான அவசியம் என்ன? விமான விபத்தை தடுக்கத்தான் பாதுகாப்பு முறைகள், ஒழுங்காற்று வாரியங்கள் போன்றவை இருக்கின்றன. பொறுப்பை தட்டிக் கழிக்கும் வகையில் அமித் ஷா பேசி இருக்கிறார். இது நல்லதல்ல.

ஊடகவியலாளர் ரானா அயூப்

எந்த பொறுப்புணர்வும் அற்ற ஒரு ரவுடி அரசு (இஸ்ரேல்) விளைவுகள் எதையும் பற்றி கவலைப்படாமல் உலகை போர்ச்சூழலுக்கு இழுத்து வருகிறது. பலிபீடத்திலோ ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் கிடக்கின்றன.