states

img

கையில காசு, வாயில தோசை!

டொரண்ட் குழுமம் என்பது டொரண்ட் ஃபார்மா, டொரண்ட் பவர், டொரண்ட் கேபிள்ஸ்,  டொரண்ட் கேஸ் ஆகிய நிறுவனங் களை உள்ளடக்கியது. இதன் தலை வர் மேத்தாவும், அதானியும் மோடி யின் நீண்டகால நண்பர்கள். 2003  குஜராத் கலவரத்துக்குப்பின், மோடிக்கு எதிராக சிஐஐ குரல் எழுப்பியபோது, மோடிக்கு ஆதரவாக நின்றவர்கள் இவர்கள்தான்.  மோடி பிரதமரானவுடன் டொரண்ட்  ஃபார்மாவின் மருந்து ஒன்றுக்கு விலைக் கட்டுப்பாடு இல்லாமல் விற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது, புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளை ஊக்கு விக்கும் நோக்கில், முதல் 5 ஆண்டு களுக்கு, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் கட்டுப்பாடு இன்றி, நிறுவனம் விரும்புகிற (அதிக) விலைக்கு விற்றுக்கொள்ளும் இந்த அனுமதி, இந்த டொரண்ட் ஃபார்மாவுக்குத்தான் முதன்முதலில் வழங்கப்பட்டது. அதற்கு முன்பு ஒரு  புதிய மருந்துக்கு இந்த அனுமதியைக் கேட்ட கிளாக்சோ ஸ்மித்கிளீன் நிறு வனத்திற்கு அது மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டொரண்ட் குழுமம் தேர்தல்  பத்திரங்களின்மூலம் ரூ.137 கோடி யை பாஜகவுக்கு அளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் அல்லாத வழி களிலும் இந்த நிறுவனம் ரூ.102  கோடியை பாஜகவுக்கு அளித்துள் ளது. அதற்கான கைமாறும் ஏராள மாகச் செய்யப்பட்டுள்ளது. 2019 மே 7, 10 தேதிகளில் இக்குழும நிறு வனங்கள் ரூ.14.9 கோடிக்குத் தேர்தல்  பத்திரங்கள் வாங்குகின்றன. மே 27  அன்று, மகாராஷ்டிராவின் பாஜக அரசு, இந்நிறுவனம் செலுத்த வேண் டிய ரூ.285 சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்கிறது. கையில காசு, வாயில தோசை! தாத்ரா, நாகர் ஹவேலி பகுதி யின் மின் விநியோகத்தைத் தனி யார் மயமாக்குவதாக மோடி தலைமை யிலான மத்திய அமைச்சரவை அறி விக்கிறது. அதில் 51 சதவீதம் இந்த  டொரண்ட் குழுமத்திற்கு வழங்கப்படு கிறது. குஜராத்தில் சூரிய ஒளி மற்றும்  ஹைட்ரஜன் மின்னுற்பத்தி நிலை யங்களுக்கான ரூ.47,350 கோடி  திட்டம் இந்தக் குழுமத்திற்கு வழங்கப்  படுகிறது. அடுத்த மாதத்தில், உத்த ரப்பிரதேசத்தில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான மின்னுற்பத்தித் திட்டங்கள் இக்குழுமத்திற்கு அளிக் கப்பட்டு, மோடியே அடிக்கல் நாட்டு கிறார். என்டிபிசியின் வித்யூத் வியா பார் நிகம், இக்குழுமத்திடமிருந்து 38.8 கோடி யூனிட் மின்சாரம் வாங்க  மார்ச் 2024இல் ஒப்பந்தம் செய்கிறது.