புதுதில்லி,ஏப்.4- மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை நிராகரித்தது ஒன்றிய பாஜக அரசின் இரக்க மற்ற செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணச் சலுகை மீள்வது குறித்து நான் 20.10.2021 எழுதிய கடிதத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் 21.03.2022 அன்று பதில் அளித்துள்ளார். 2020 - 21 இல் ரயில்வே பயணக் கட்டணம், 2019 - 20 ஐ ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்குதான் இருந்தது என்று கூறி, எல்லா பிரிவினருக் கும் சலுகை கட்டணம் வழங்குவது சாத்தியமல்ல என்று தெரிவித்துள் ளார். கோவிட் காலத்தில் நிறைய நாட்கள் ரயில்கள் ஓடவில்லை. ஆகவே வருவாய் குறைந்தது எல்லோரும் அறிந்ததே. அதுபோல பல குடும்பங்களும் வருவாயை, வேலைகளை இழந்தன. கோவிட் கால நிவாரணமாக மாதம் ரூ. 7500 தாருங்கள் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. மூத்த குடிமக்களின் உளவியல் பாடுகள் சொல்லிமாளாது. தாங்கள் சுமை யாக கருதப்படக் கூடாது என்ற அவர்களின் உணர்வுகள் மிக முக்கியமானது. அரசாங்கத்திற்கு இதயம் வேண்டும். இது போன்ற கட்டண சலுகைகள் அவர்களுக்கு சமூகம் ஆற்றுகிற நன்றிக் கடன் மட்டு மல்ல, அவர்களின் உரிமையும் கூட. இன்னும் அவர்கள் தாங்கள் நுகரக் கூடிய ஒவ்வொரு பண்டம், சேவை மீதும் வரி செலுத்துகிறார்கள். வரு மான வரி செலுத்துபவர்களும் உண்டு. கடந்த 6 மாதங்களாக முன்பைப் போல ரயில்கள் ஓட ஆரம்பித்தும்விட்டன. அவர்கள் கை விரலைப் பிடித்து இந்த தேசம் நடந்திருக்கிறது. அமைச்சரே உங்கள் பதில் குரூர மானது. மறு பரிசீலனை செய்யுங் கள். மீண்டும் கட்டண சலுகையை கொண்டு வாருங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.