ராஜ்கர், பிப்.8- வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரி கள் பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றதாக பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. மத்தியப் பிரதேச மாநி லம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பச்சோர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பை அகற் றும் பணி நடைபெற்றுள்ளது. வட்டாட்சியர் ராஜேஷ் சோர்டே தலைமையில் வரு வாய்த்துறை அதிகாரிகள் இந்தப் பணியை மேற் கொண்டுள்ளனர். அப்போது அங்குவந்த மத்தியப் பிரதேச மாநில பாஜக முன்னாள் எம்எல்ஏ பகவான் சிங் ராஜ்புத், ஆக்கி ரமிப்பு அகற்றத்தை கைவிடு மாறு வட்டாட்சியரை எச்ச ரித்துள்ளார். பின்னர், தன் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை வட் டாட்சியர் ராஜேஷ் சோர்டே மீதும், ஆக்கிரமிப்பு தடுப்புப் பிரிவினர் மீதும் ஊற்றி, அவர் கள் மீது தீ வைத்து எரிக்கும் முயற்சியிலும் பகவான் சிங் இறங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்க ளில் பரவி பரபரப்பை ஏற் படுத்திய நிலையில், இது குறித்து தலைமை நகராட்சி அதிகாரி பவன் மிஸ்ரா. காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதைத் தொட ர்ந்து, தற்போது பாஜக முன்னாள் எம்எல்ஏ பகவான் சிங் ராஜ்புத் மற்றும் அவ ரது ஆதரவாளர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டு உள்ளது.