“இந்து மதத்தை விட்டு வெளியேறியவர் களை மீண்டும் இந்து மதத்திற்கே நாம் கொண்டு வர வேண்டும். மடங்க ளுக்கு இலக்கு நிர்ண யிக்க வேண்டும்” என்று பெங்களூரு பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா பேசியதற்கு கண் டனங்கள் எழுந்தது. இதையடுத்து, “உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து மறுமலர்ச்சி என்ற தலைப்பில் நான் பேசினேன். எனது உரை யின் சில கருத்துகள் சர்ச்சையை உரு வாக்கியது வருத்தமளிக்கிறது. எனவே அந்த கருத் துக்களை நிபந்தனையின்றி திரும்பப் பெறுகிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.