குடியரசுத் தலைவர், பிரதமருக்கு முன்னாள் ராணுவத் தளபதிகள் கடிதம்
புதுதில்லி, ஜன.1- ‘தர்ம சன்சத்’ என்ற பெயரில் மாநாடுகளை நடத்தி, அதில் முஸ் லிம்கள் உள்ளிட்ட சொந்த நாட்டு மக்களையே இனப்படுகொலை செய்யுமாறு தூண்டிய சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவத் தளபதி கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். உத்தரகண்ட் மாநிலம் ஹரித்து வார், தில்லி, ராய்பூர் என நாட்டின் பல்வேறு பகுதிகளில், இந்துத்துவா அமைப்புக்கள் கூடி “தர்ம சன்சத்” (‘Dharma Sansad’) என்ற பெய ரில், கடந்த டிசம்பர் 17 முதல் 19 வரை மூன்று நாட்களுக்கு மாநாடு நடத்தி னர். இவற்றில் பேசிய சாமியார் களும், பாஜக தலைவர்களும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை யினருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந் தார்கள். “இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கும், இந்துக்களுக்கு மட்டுமான நாடாக உருவாக்கு வதற்கும் போர் நடத்துவோம். தேவைப் பட்டால் கொலையும் செய்வோம். எதற்காகவும் அஞ்சக் கூடாது. மியான்மரில் (ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக) நடந்த தைப் போன்ற இன அழிப்பில் நாம் ஈடுபட வேண்டும். காவல்துறை, ராணுவம், அரசியல் பதவிகளில் உள்ள இந்துக்கள் தங்கள் கையில் ஆயுதங்களை எடுக்க வேண்டும். இன அழிப்பில் ஈடுபட வேண்டும். வெறும் 100 இந்துக்கள் சேர்ந்தால், 20 லட்சம் முஸ்லிம்களை கொன்று குவிக்கலாம்” என்று கொலைவெறி யைத் தூண்டினார்கள்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலை யில், ஒன்றிய பாஜக அரசு இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதையடுத்து, இவ்விவகா ரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து (Suo Moto) விசாரிக்க வேண்டும் என்று பாட்னா உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ், மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, சல்மான் குர்ஷித், பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட நாட்டின் மூத்த வழக்கறிஞர்கள் 76 பேர் தலைமை நீதிபதி என்.வி. ரமணா வுக்கு கூட்டாக கடிதம் ஒன்றை எழுதி னர். இந்நிலையில், மதவன்முறை யைத் தூண்டிய சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு, முன்னாள் ராணுவத் தளபதிகளும் கடிதம் எழுதியுள்ள னர்.
“தேசத்தின் அமைதிக்கும், நல்லி ணக்கத்திற்கும் குந்தகம் விளை விக்கும் செயல்பாடு எதுவாக இருந் தாலும் அது அந்நிய சக்திகளை ஊக்குவிக்கும். நமது இந்தியச் சமூ கம் பன்முகத்தன்மை கொண்டது. இந்தச் சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு எதிராக விதைக்கப் படும் வன்முறை சீருடை தாங்கிய வீரர்கள், மத்திய ஆயுதப் படை யினர், காவல் துறையினர் என அனை வரின் மத்தியிலும் நிலவும் ஒற்று மையை சீர்குலைக்கும். தர்ம சன்சத் நிகழ்ச்சியின் மூன் றாம் நாளில் இந்து சாதுக்கள் சிலரின் பேச்சுக்கள் அதிர்ச்சியளிக்கி றது. இந்து தேசத்தை அமைக்க வேண்டும் என்றும், தேவைப்பட் டால் ஆயுதம் ஏந்தி முஸ்லிம்களைக் கொன்று இந்து மதத்தைக் காக்க வேண்டும் என்றும் பேசியுள்ளனர்.
இது மிகவும் ஆபத்தானது. நாட்டின் அமைதி மற்றும் நல்லி ணக்கத்தை சீர்குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அந்நிய சக்திகளை ஊக்குவிப்பதாக அமையும். இத்தகைய வெறுப்புப் பேச்சுக்கள் பொதுவெளியில் பேசப்படுவதை ஏற்க முடியாது. இது உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் பேச்சு. கூடவே நம் தேசத்தின் சமூகக் கட்ட மைப்பையும் கிழித்தெறியும் பேச்சு. ராணுவத்தினரும், போலீசாரும் ஆயுதம் ஏந்தி ‘சஃபாயி அபியான்’ அதாவது வேற்று மதத்தினரை அழிக்கும் நிகழ்வில் பங்கேற்குமாறு ஒரு சாமியார் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறார். நம் சொந்த மக்க ளையே இன அழிப்பு செய்யச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம். இது கண்டனத்துக்குரி யது. ஏற்றுக்கொள்ளவே முடியா தது. இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தளபதிகள் கூறி யுள்ளனர். முன்னாள் கடற்படைத் தளபதி களான அட்மிரல் (ஓய்வு) எல். ராம்தாஸ், அட்மிரல் (ஓய்வு) விஷ்ணு பகவத், அட்மிரல் (ஓய்வு) அருண் பிரகாஷ் மற்றும் அட்மிரல் (ஓய்வு) ஆர்.கே. தோவன் உள்பட ராணுவப் படைகளின் முன்னாள் தளபதிகள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற் பட்டோர் இந்த கடிதத்தில் கையெ ழுத்திட்டுள்ளனர்.