வெளியுறவுத்துறை நடவடிக்கைக்கு சசிதரூர் அதிருப்தி
புதுதில்லி, பிப்.19- “இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் ஜவ ஹர்லால் நேரு, டேவிட் பென் குரியோன்ஸ் போன்ற மாபெ ரும் ஆளுமைகள் கட்டமைத்த ஜனநாயக மதிப்பீடுகளை, அந்த நாடுகளின் தலைமுறை களால் அதே வேகத்துடனும், துடிப்புடனும் நிலைநிறுத்த முடியவில்லை” என்று சிங் கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பேசியிருந்தார். “இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சரிபாதி பேர் மீது, பாலியல் வல்லு றவு உள்ளிட்ட கிரிமினல் வழக் குகள் இருப்பதாக ஊடக அறிக்கைகள் கூறுவது, அர சியல் தரநிலைகள் சீரழிந்து இருப்பதையே காட்டுகிறது” என்றும் கூறியிருந்தார். இதற்காக, இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சகம், சிங்கப்பூர் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்ததுடன் அவரிடம் விளக்கமும் கோரி யுள்ளது. இந்நிலையில், “இந்திய வெளியுறவுத்துறையின் இந்த நடவடிக்கை பண்பாடற்றது” என்று காங்கிரஸ் மூத்த தலை வரும், எம்.பி.யுமான சசி தரூர் விமர்சித்துள்ளார். “சிங்கப்பூா் பிரதமா் லூங், தனது நாட்டின் நாடாளு மன்றத்தில் தெரிவித்த சில கருத்துக்களுக்காக, நட்பு நாடு என்றும் பாராமல் அந் நாட்டின் தூதரை அழைத்து வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது முறையற்றது. பிரதமர் லூங் தெரிவித்த கருத்துகள் பொதுவானவை. விமர்சனங் கள் எழும்போது எளிதில் உணர்ச்சி வசப்படாமலிருக்க நாம் கற்றுக் கொள்ள வேண் டும்” என்று சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப் பிட்டுள்ளார்.