பிரிட்டனுக்கான கியூபா தூதர் பார்பரா அல்வரேஸ் அவர்கள் தலைமையிலான தூதுக்குழுவை லண்டனில் சந்தித்தோம். பிரிட்டன் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நவேந்து மிஸ்ரா மற்றும் ஹர்சேவ் பெய்ன்ஸ் உடன் இருந்தனர். இவர்கள் இருவரும் பிரிட்டனின் கியூபா ஒருமைப்பாடு குழுவின் உறுப்பினர்கள். முன்னதாக லண்டனில் இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு மாநாட்டிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. 75ஆண்டுகளைக் கடந்துள்ள இந்திய சுதந்திரம் இன்னும் சாதிக்க வேண்டிய தூரம் மிக அதிகம். இந்திய மக்கள் தாங்கள் இதுவரை சாதித்துள்ள மகத்தான காரியங்களையும் அதனால் கிடைக்கப்பெற்ற பலன்களையும் ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள். இன்னும் சிறந்த இந்தியாவை உருவாக்குவதற்காக மேலும் மேலும் கடினமாக நிச்சயம் உழைப்பார்கள்.
கிராமப்புறங்களில் விலைவாசி வரலாறு காணாத உச்சத்தில்! உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயர்வு! நகர்ப்புற ஏழைகள் மட்டுமல்லாது கிராமப்புற ஏழைகளும் வாழ்வாதாரத்தின் விளிம்பில்! வருமான வரி வரம்புக்கு வெளியே உள்ள குடும்பங்களுக்கு இலவச உணவுப் பொருட்களும் நேரடி நிதி உதவி மாதம் ரூ .7500 தாருங்கள்!
https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury