சஞ்சய் ராவத் கேள்வி
மும்பை, பிப். 28 - மகாராஷ்டிராவில் சிவ சேனா அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வரு கின்றன. சிவசேனா கட்சியைச் சேர்ந்தவரும், மும்பை மாநகராட்சியின் நிலைக்குழு தலைவருமான யஷ்வந்த் ஜாதவ் வீட்டிலும் வெள்ளிக்கிழமையன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனை சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினரு மான சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். “மகாராஷ்டிராவில் மட்டும்தான் வரு மானமும், வரியும் இருப்ப தாக நினைக்கிறேன். பாஜக ஆளும் மாநிலங்களில் வரு மானமும் கிடையாது, வரி யும் கிடையாது. எனவே, சோதனையும் கிடையாது போலிருக்கிறது” என்று சாடியுள்ளார். “2022 பிருஹன்மும்பை மாநகராட்சித் தேர்தல் நெருங்கி வந்துள்ளதால், வருமான வரித்துறை போன்ற மத்திய அமைப்புகள் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டுமே இயங்குகின்றன. நாட்டின் மற்ற (பாஜக ஆளும்) பகுதிகள் காலியாக உள்ளன. ஏனென்றால், அங்கு எல்லாமே நன்றாக உள்ளது....? ஆனால், இதை யெல்லாம் நாங்களும் பார்த்துக் கொண்டிருக் கிறோம். மக்களும் பார்க்கிறார்கள்” என்று ராவத் குறிப்பிட்டுள்ளார்.