திருவனந்தபுரம், மார்ச் 6- திருவனந்தபுரம் ஸ்ரீசங்கராச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) வெற்றி பெற்றது. சங்கத்தின் தலைவர் ரோஷன் செரியன், துணைத் தலைவர் ரசிக பிரியா, பொதுச் செயலர் என்.கே.ஜிஷ்ணு, இதழ் ஆசிரியர் ஜி.பி.பிரதீஷ் கிருஷ்ணன், ஆர்ட்ஸ் கிளப் செயலர் கே.அஸ்வதி, முதலாம் ஆண்டு பிரதிநிதி எஸ்.அபின், இரண்டாம் ஆண்டு பிரதிநிதி ஜே.நிதின், மூன்றாம் ஆண்டு பிரதிநிதி கே.அனந்தகிருஷ்ணன், இரண்டாமாண்டு பி.ஜி (பட்ட மேற்படிப்பு) பிரதிநிதியாக எஸ்எப்ஐ உறுப்பினர்கள் அஜித்குமார் மற்றும் மகளிர் பிரதிநிதி எல்.பாவனா வெற்றி பெற்றனர். வெற்றி விழாவை எஸ்எப்ஐ மாவட்ட இணை செயலாளர் கோகுல் கோபிநாத் துவக்கி வைத்தார். நிரஞ்சன், நந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பம்பை தேவசம் கல்லூரி
இதுபோல் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பெருமலா-பம்பை தேவசம் போர்டு கல்லூரி யூனியன் தேர்தலில் மொத்தம் உள்ள அனைத்து 14 இடங்களிலும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்ட பெண்களே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கேஎஸ்யு மற்றும் ஏபிவிபி ஆகிய மாணவர் அமைப்பினர் வேட்புமனு தாக்கல் செய்ய கூட முன்வரவில்லை.