states

img

3 மாதத்தில் மட்டும் ரூ. 2.70 லட்சம் கோடி கடன் அதிகரிப்பு ஒன்றிய அரசின் மொத்தக் கடன் ரூ. 128 லட்சம் கோடி ஆனது!

புதுதில்லி, மார்ச் 29 - கடந்த டிசம்பா் வரையிலான ஒன்றிய அரசின் மொத்தக் கடன் ரூ. 128 கோடியே 41 லட்சமாக அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசின் நிதிசார் புள்ளி விவரங்களை ஒன்றிய நிதியமைச்ச கம் திங்கட்கிழமை வெளியிட்டுள் ளது.  இதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பா் வரையிலான கால கட்டத்தில் ரூ. 125 கோடியே 71 லட்சம்  கோடியாக இருந்த ஒன்றிய அரசின் மொத்தக் கடன் மதிப்பு, கடந்த டிசம்பா் வரையிலான காலத்தில் ரூ. 128 கோடியே 41 லட்சமாக அதிகரித்துள்ளது. நடப்பு 2021-22 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுடன் (ஜூலை - செப்டம்பர்) ஒப்பிடுகையில், மூன்றாவது காலாண்டில் (அக்டோ பர் - டிசம்பர்) மொத்தக் கடன் மதிப்பு 2.15 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  ஒன்றிய அரசால் வெளி யிடப்பட்ட நிதிப் பத்திரங்களில் 25  சதவிகிதமானது இன்னும் 5 ஆண்டு களுக்குள் காலாவதியாகவுள்ளது. நிதிப் பத்திரங்கள் காலாவதியாகும் காலத்தில், அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொண்டுஅதற்கான தொகையை அளிக்க வேண்டிய கட்டா யம் ஒன்றிய அரசுக்கு ஏற்படும். கடந்த ஆண்டு அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான 3-ஆவது காலாண்டில் ரூ. 2 லட்சத்து 88 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதிப் பத்திரங்களை ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது. இது கடந்த 2020-21 நிதியாண்டின் 3-ஆவது காலா ண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி அதிகமாகும்.  நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில், நிதிப் பத்திரங்களைக் கொள்முதல் செய்தோருக்கு ஒன்றிய அரசு திருப்பி அளித்த தொகை ரூ. 75 ஆயிரத்து 300 கோடியாக இருந்துள்ளது.