ஹைத்தி நாட்டு மக்களை அத்தி யாவசிய பண்டங்களின் உயரும் விலைவாசி, எரிபொருள் பற்றாக் குறை, பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமை போன்ற பிரச்சனை கள் வாட்டி வதைக்கின்றன. 2021 நவம்பரைக் காட்டிலும் டிசம்பரில் வாழ்க்கைச் செலவினம் 25 சத வீதம் கூடியுள்ளது. 2019-க்குப் பிறகு குறைந்த பட்ச ஊதியம் உயர்த்தப்பட வில்லை. ஜிடிபி வளர்ச்சி 1.8 சத வீதம் மட்டுமே. யுனிசெப் 33 லட்சம் ஹைத்தி மக்களுக்கு பாதுகாப் பான குடிநீர் கிடைக்கவில்லை என எச்சரிக்கிறது. 2021 ஆகஸ்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2248 பேர் மடிந்தனர். 130000 கட்டி டங்கள் இடிந்து விட்டன. குடிநீர் கிடைக்காமல் இருப்பதற்கு நிலநடுக்க சேதங்களும் கார ணம். ஹைத்தியின் ஜனாதிபதி ஜோவெனெல் மோய்ஸ் 2021 ஜூலையில் படுகொலை செய்யப் பட்டார். இதற்கு முன்பே ஹைத்தியில் கலகக் கும்பல் வன்முறைகளில், பாலியல் பலாத்கார செயல் களில் ஈடுபட்டனர்.
ஆயுதம் தாங் கிய கும்பல்கள் பெட்ரோலிய பொருட்கள் வினியோக டெர்மி னல்களை கைப்பற்றியதால் எரி பொருள் பற்றாக்குறை கடுமை யாக உயர்ந்துள்ளது. ஹைத்தி யில் நிலவிவரும் வன்முறை சம்ப வங்கள், அரசியல் ஸ்திரமின்மை, மோசமான பொருளாதார நிலை மைகளால் ஏராளமானோர் டொமி னிக்கன் குடியரசு, மெக்சிகோ, அமெரிக்காவிற்கு குடியேறு கின்றனர். அங்கெல்லாம் குடி யேறியவர்கள் என்ற அடிப்படை யில் பாரபட்சமாக நடத்தப்படு கிறார்கள். சமீபத்தில் வன்முறை குழு தலைவரை பேட்டி காணச் சென்ற இரண்டு பத்திரிகையாளர் கொல் லப்பட்டனர். ஹைத்தியில் வன் முறைக் கும்பல்களின் செயல் களால் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்துவதே சிரமமாக உள்ளது. ஜனவரி ஒன்றில் சுதந்திர தினத் தன்று பலர் கடத்தப்பட்டனர். ஹைத்தியின் பிரதமர் ஏரியல் ஹென்றி நினைவுச்சின்னம் ஒன்றிற்கு அஞ்சலி செலுத்த சென்ற போது அவரைக் கொல்ல முயற்சிக்கப்பட்டது. அவர் உயிர் தப்பினார். இது அவரை கொலை செய்ய நடந்த இரண்டாவது முயற்சியாகும். நாட்டின் பாது காப்பு மீதான அரசு கட்டுப்பாடு மிகவும் தளர்ந்து வருகிறது.
ஹைத்தியின் எதிர்க்கட்சிகள் ஏரியல் ஹென்றி பிரதமராக நீடிப்பதை விரும்பவில்லை. வெளிநாட்டு தலையீடுகளை மக்கள் எதிர்க்கின்றனர். ஹைத்தியின் இறை யாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். தேர்தல் மூலம் புதிய அரசு அமைய வேண்டும் என வலி யுறுத்துகின்றனர். இடைக்கால அரசு என்பதன் பேரால் நீதிபதி தலைமையில் அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் ஐநா பிரதிநிதி கள் கொண்ட அரசு அமைப் பதை மக்கள் ஏற்கவில்லை. பொரு ளாதார நிலையும் சரி இல்லை; அரசியல் நிலைமையும் சரி இல்லை. வாழ்வா? சாவா? என மக்கள் போராடி வருகின்றனர்.