states

img

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றியது உச்சநீதிமன்றம்!

புதுதில்லி, ஆக. 25 - மணிப்பூர் பாலியல் வன்கொடு மைச் சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் வழக்குகளை, அசாம் மாநில உயர் நீதிமன்ற எல்லைக்குள் மாற்றி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பரிந்துரை

முன்னதாக, இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்தி வாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில்  வெள்ளிக்கிழமையன்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, மணிப்பூர் மாநில அரசு  சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி சில பரிந்துரைகளை அளித்தார். “மணிப்பூரில் உள்ள  குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி கள் குறித்து சில கவலைகள் இருக்க லாம்; மேலும், குற்றம்சாட்டப்பட்ட வர்களை கொண்டுசெல்வது தொடர் பான பாதுகாப்பு கவலைகளும் உள்ளன. எனவே, விசாரணையை அண்டை மாநிலமான அசாமில் உள்ள ஒரு நியமிக்கப்பட்ட நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு” துஷார் மேத்தா வேண்டு கோள் விடுத்தார்.

பாதிக்கப்பட்ட பெண்கள்  கடும் எதிர்ப்பு

ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் குழுக்களுக் காக ஆஜரான வழக்கறிஞர்கள் - மூத்த  வழக்கறிஞர்கள், கொலின் கோன்சால்வ்ஸ், சந்தர் உதய் சிங், இந்திரா ஜெய்சிங், வழக்கறிஞர்கள் விருந்தா குரோவர் மற்றும் நிஜாம் பாஷா உள்ளிட்டோர் வழக்குகளை அசாமிற்கு மாற்றும் முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  குற்றங்கள் நடந்த அதிகார வரம்பிற்கு உட்பட்ட இடங்களில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோன்சால்வ்ஸ் வலியுறுத்தியதோடு, பாதிக்கப்பட்டவர்களை அசாம் செல்ல கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறினார். விசாரணைகள் அசாமிற்கு மாற்றப்படுவது குறித்து, இந்திரா ஜெய்சிங் கவலைகளை எழுப்பினார். மேலும் “இது சொலிசிட்டர் ஜெனரல் வழங்கிய முந்தைய உறுதிமொழிக்கு முரணானது” என்றும் கூறினார்.  “வழக்குகளை அசாமிற்கு மாற்றி னால் மொழித் தடைச் சிக்கல்கள் எழக்கூ டும்” என்று பாஷா கூறினார். அவர், பாஜக - காங்கிரஸ் கட்சிகள் அல்லாத மாநிலக் கட்சியின் ஆட்சி நடக்கும் மிசோரத்தை ஒரு மாற்று இடமாக பரிந்துரைத்தார். இந்திரா ஜெய்சிங், மற்றொரு மாநிலக் கட்சி ஆளும் மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கை பரிந்துரைத்தார்.  இவற்றுக்குப் பதிலளித்த தலை மை நீதிபதி, மற்ற “அண்டை மாநிலங் கள் (மிசோரம், மேகாலயா) குறைவான உள்கட்டமைப்பு கொண்ட சிறிய மாநி லங்கள்” என்று கூறினார். “பாதிக்கப் பட்டவர்கள் ஷில்லாங் போன்ற பிற இடங்களுக்குச் செல்ல, அவர்கள் அசாம் வழியாகவே செல்ல வேண்டும்” என்றும் அவர் கூறினார். “பள்ளத்தாக்குகளிலும், மலைகளி லும் மக்கள் பலியாகியுள்ளனர். பள்ளத் தாக்குகளில் பாதிக்கப்பட்ட மக்கள்  மலைகளுக்குச் செல்வது கடினமாக இருக்கும், வேறு வழிகளில் பயணம் செய்வது கடினம். எனவே, நடை முறைச் சிக்கல் காரணமாகவே வழக்கு கள் அசாமிற்கு மாற்றப்படுகிறது” என்றும் தலைமை நீதிபதிகுறிப்பிட்டார்.

அதேபோல, “சிபிஐ-க்கு மாற்றப் பட்ட வழக்குகளுக்கு மட்டுமே இந்த வழி காட்டுதல்கள் கோரப்படுவதாகவும், சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் விசா ரித்து வரும் மற்ற வழக்குகள் மணிப்பூரி லேயே நடைபெறும்” என்றும் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு தனது  வழிகாட்டு உத்தரவுகளைவழங்கியது. “தற்போதைய கட்டத்தில், மணிப்பூரில் உள்ள ஒட்டுமொத்த சூழ லையும், குற்றவியல் நீதி நிர்வா கத்தின் நியாயமான செயல்முறையை உறுதிசெய்வதன் அவசியத்தையும் மனதில் கொண்டு, பின்வரும் வழி காட்டுதல்களை நாங்கள் வழங்கு கிறோம்:

1.     அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்/செஷன்ஸ் நீதிபதி பதவியில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகளை நியமிக்குமாறு கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை
நீதிபதியிடம் கேட்டுக்கொள் கிறோம். தலைமை நீதிபதி, மணிப்பூரின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்த நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
2. குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆஜர்படுத்துதல், தடுப்புக்காவல், நீதிமன்றக் காவல், காவல் நீட்டிப்பு மற்றும் விசாரணை தொடர்பான பிற நடவடிக்கைகளுக்கான அனைத்து விண்ணப்பங்களும் பாதுகாப்புமற்றும் தொலைதூரப் பிரச்சனைகளை மனதில் கொண்டு ஆன்லைன்முறையில் நடத்த அனுமதிக்கப்படு கிறது.
3.    குற்றம் சாட்டப்பட்டவரின் நீதிமன்றக் காவலுக்கு அனுமதி அளிக்கப்படும் போது, மணிப்பூர் மாநிலத்தில் போக்குவரத்தைத் தவிர்க்க அனுமதிக்கப்படும்.
4.     பிரிவு 164 சிஆர்பிசி (CrPc)-இன்கீழ் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மணிப்பூரில் உள்ள உள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. அவ்வ்வாறு இல்லாமல் மணிப்பூருக்கு வெளியே வசிக்கும் சாட்சிகளிடம் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே வாக்குமூலங்களைப் பெறலாம். அதற்கேற்ப மாஜிஸ்திரேட்டுகளை, மணிப்பூர் உயர் நீதிமன்றத் தற்காலிக தலைமை நீதிபதி நியமிக்க வேண்டும்.
5.     சோதனை அடையாள அணிவகுப்பு மணிப்பூரை தளமாகக் கொண்ட மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடத்த அனுமதிக்கப்படுகிறது. கைது மற்றும் வாரண்ட் போன்ற நடவடிக்கைகள் ஆன்லைன்முறையில் செய்ய அனுமதிக்கப்படுகிறது”இவ்வாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.