லக்னோ, பிப்.19- “உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்பது உறுதி; இங்கு சமாஜ்வாதி கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சி யமைக்கும்” என்று தில்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநரும், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழ கத்தின் முன்னாள் துணை வேந்தருமான நஜீப் ஜங் கூறியுள்ளார். ‘தி வயர்’ இணைய இதழுக்காக, கரண் தாப்பருக்கு நஜீப் ஜங் பேட்டி அளித் துள்ளார். அதில், பாஜக ஏன் தோற்கப் போகிறது? என்பதற்கான நான்கு கார ணங்களை அவர் விளக்கியுள்ளார். உ.பி. தேர்தலில், சமாஜ்வாதி கட்சி யும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 202 இடங்களைக் கடந்து தனிப்பெரும் பான்மையைப் பெறுவார்கள். மற்ற கட்சி களின் ஆதரவு தேவையில்லாமல் அவர் கள் ஆட்சி அமைப்பார்கள்.
பாஜக பிரச்சார இயந்திரத்தில் இந்த முறை பிரதமர் நரேந்திர மோடி பிரதானமாக இல்லை. மாறாக, யோகி ஆதித்யநாத்தே முதன்மைப்படுத்தப் பட்டார். இது பாஜகவின் மிகப்பெரிய தவறான அணுகுமுறை. தேர்தலின் முக மாக மோடிதான் இருந்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் வெற்றி முகம் பாஜக பக்கம் இருந்திருக்கும். அது தற்போது நடக்கவில்லை. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதி ராகப் போராடியவர்கள் மீதான அடக்கு முறையும், விவசாயிகள் சங்கங்களின் தலைவர் ராகேஷ் திகாயத், ‘இன்னும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, வழக்குகள் வாபஸ் பெறவில்லை.. எனவே, மீண்டும் போராடுவோம்’ என்று அறிவித்ததும் நிச்ச யம் பாஜகவுக்கு எதிராகவே போகும். மற்ற மாநிலங்களை விட, உத்தரப் பிரதேசத்தில் வேலையில்லாத் திண் டாட்டம் அதிகம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த வகை யில், உ.பி.யில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டமும் நிச்சயமாக பாஜகவுக்கு எதிராகத் திரும்பும். மிக முக்கியமாக, கொரோனா இரண் டாம் அலை ஏற்படுத்திய தாக்கம், அதனை ஆதித்யநாத் அரசு கையாண்ட விதம், மக்கள் மனதில் இன்னமும் பீதியாகக் குடி கொண்டிருக்கிறது. புலம்பெயர் தொழி லாளர்கள் பட்ட வேதனையும் இந்தத் தேர்தலில் பங்களிப்பு செய்யும்.
இவ்வளவும் இருக்கையில், உத்த ரப் பிரதேச மக்களின் வாழ்க்கைப் பிரச்ச னைகளை ஆதித்யநாத்தின் தேர்தல் உரை கள் பிரதிபலிக்கவில்லை. அவர் சமூ கத்தைப் பிளவுபடுத்துவதில், குறியாக இருப்பதால், பாஜக-வுக்கு பின்னடைவு தான் ஏற்படும். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகி லேஷ், வெறும் இதர பிற்படுத்தப்பட்டோ ரின் வாக்குகளை மட்டுமே ஈர்க்க வில்லை. மாறாக யாதவர்கள் அல்லாத ஓபிசி-க்களையும் அவர் ஈர்த்துள்ளார். 2017-இல் 58 சதவிகித முஸ்லிம்கள் சமாஜ்வாதிக்கு வாக்களித்தனர். இந்த முறை 80 சதவிகித முஸ்லிம்கள் சமாஜ் வாதிக்கே வாக்களிப்பார்கள். இன்னொரு புறம் பிராமணர்கள் முக்கால்வாசி காங்கி ரஸ் பக்கம் நகர வாய்ப்புள்ளது. இவர்கள் சமாஜ்வாதிக்கு வாக்களிக்க மாட்டார் கள். ஆனால் நிச்சயம் பாஜக-வை பல வீனப்படுத்துவதற்கு செயல்படுவார்கள். அதே போல் ஜாதவ் அல்லாத தலித்துக் கள் பெரும்பாலும் மாயாவதியின் பகுஜன் கட்சிக்கும் காங்கிரசுக்கும்தான் வாக்க ளிப்பார்கள். இது பாஜகவை மேலும் பல வீனப்படுத்தும். இவ்வாறு நஜீப் ஜங் கூறியுள்ளார்.