புதுதில்லி, பிப்.12- துபாயில் இருந்து வெளியாகும் ‘போர்ப்ஸ் மிடில் ஈஸ்ட்’ இதழின் இந்தியாவுக்கான நிருப ராக இருந்தவர் ரேச்சல் சித்ரா. இவர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியிட்டதற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ‘போர்ப்ஸ்’ மீடியா ஒவ்வொரு ஆண்டும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுவதில் பிரபலமான உலகளாவிய ஊடகமாகும். ‘போர்ப்ஸ் மிடில் ஈஸ்ட்’ என்பது அரபு உல கத்திற்கான போர்ப்ஸின் உரிமம் பெற்ற பதிப்பா கும். இது, மத்திய கிழக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) ஒரு பகுதியான துபாயில் அமைந்துள்ளது. இதில்தான ரேச்சல் சித்ரா, இந்தியாவிற்கான செய்தியாளராக இருந்து வந்தார். அண்மையில் பிரதமர் மோடியின் 7 ஆண்டு ஆட்சி குறித்து, விரிவான கட்டுரை ஒன்றை அவர் எழுதினார். “இந்தியாவில் வெறுப்பு ணர்வால் அரங்கேறும் தாக்குதல்கள் அதி கரித்துள்ளன.
குறிப்பாக, 2014 முதல் 2020 வரை ஆங்கில மொழி செய்தித்தாள்களில் இருந்து பெறப்பட்ட 212 வெறுப்பு குற்றங்களில், பெரும்பான்மையான தாக்குதல்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது” என்று புள்ளிவிவரங்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், அவரின் இந்த கட்டுரை வெளியான சில நிமிடங்களிலேயே ரேச்சல் சித்ராவை போர்ப்ஸ் பத்திரிகை, வேலையிலி ருந்து நீக்கியுள்ளது. ‘போர்ப்ஸ் பக்கத்தில் கட்டுரையை பதிவிட்ட சில நிமிடங்களில் எனக்கு மெயில் வந்தது. அதில், பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்த னர். இந்த துறையில் 17 ஆண்டுகளாக பணி யாற்றி வருகிறேன். இதுபோன்ற இரக்கமற்ற செயலை நான் பார்த்ததில்லை’ என்று ரேச்சல் சித்ராவும் தனது பணிநீக்கத்தை உறுதிப்படுத்தி யுள்ளார். துபாயை உள்ளடக்கிய ஐக்கிய அரபு அமீரகமானது, மோடி அரசுடன் நெருங்கிய உற வைக் கொண்டிருக்கிறது. இந்தியப் பிரதமர் மோடிக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயரிய சிவிலியன் விருதும் கடந்த 2019-இல் வழங்கப் பட்டது. இந்தப் பின்னணியில் துபாயை தலை மையிடமாகக் கொண்டு வெளியாகும் போர்ப்ஸ் ஏட்டில் மோடி குறித்து கட்டுரை எழுதிய ரேச்சல் சித்ரா பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது, இந்தி யாவுக்கு வெளியிலும் மோடி அரசு தனது சித்தாந்த செல்வாக்கை விரிவுபடுத்தி வரு கிறது என்பதற்கான அறிகுறி என்று ஊடக வியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.