புதுதில்லி, ஜூன் 20- “அரசுக்கு செலவைக் குறைக்க நினைத்திருந்தால் பிரதமருக்காக வாங்கிய 2 விமானங்களை வாங்கா மல் தவிர்த்திருக்கலாம்” என பாஜக வினருக்கு காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட் பதிலடி கொடுத்துள்ளார். ராணுவத்திற்கு நிரந்தர அடிப்ப டையில் அல்லாமல், 4 ஆண்டு களுக்கு காண்ட்ராக்ட் அடிப்படை யில் வீரர்களை தேர்வுசெய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை நரேந் திர மோடி அரசு கடந்த ஜூன் 14 அன்று அறிவித்தது.
“இந்த 4 ஆண்டு ஒப்பந்த அடிப்ப டையிலான திட்டம் அந்த செலவை பெருமளவிற்கு குறைக்கும். ஏனெ னில் இந்த ‘அக்னி பாதை’ திட்டம் மூலம் சேரும் ராணுவ வீரர்களுக்கான சம்பளம், ஏனைய நிரந்தர ராணுவ வீரர்களை விடக் குறைவாகவே இருக் கும். அதேபோல் இவர்களுக்கு ஓய்வூ தியம் கிடையாது. இதன் காரணமாக கூடுதல் ராணுவ வீரர்கள் குறைந்த நிதிச் செலவில் ராணுவத்திற்கு பணிக்கு கிடைப்பார்கள். இதன் காரணமாக ஒன்றிய அரசுக்கு செலவு மிச்சம் ஆகும். அவ்வாறு மிச்சமாகும் தொகையை ராணுவத் தளவாட பொருட் கள் வாங்க பயன்படுத்த முடியும். தற்போது ராணுவத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடான 5 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயில் சரிபாதி, ராணுவ வீரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு செல்கிறது” என்று ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில்தான், செலவுக் குறைப்பு வாதத்தை சச்சின் பைலட் கடுமையாக சாடியுள்ளார்.
“அரசின் ஓய்வூதிய செலவி னத்தைக் குறைக்க நினைத்தால், அதற்கு வேறு வழிகளும் இருந்தன. பிரதமருக்காக வாங்கிய இரண்டு விமானங்களை (வாங்காமல்) தவிர்த்திருக்கலாம். ஒன்றிய அரசு சென்ட்ரல் விஸ்டாவையும் (புதிய நாடாளுமன்ற கட்டட வளாகம்) கட்டி யிருக்கக் கூடாது” என்று விமர்சித்துள் ளார். “வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு எப்படி திரும்ப பெற்றதோ, அதே போல அக்னி பாதை திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 2020-ஆம் ஆண்டில், பிரதமர் மோடி பயணம் செய்வதற்காக அதி நவீன வசதிகள் கொண்ட ‘பி777’ விமா னங்கள் இரண்டை ‘போயிங்’ நிறுவ னத்திடமிருந்து ஒன்றிய அரசு வாங்கி யது. இந்த 2 விமானங்களின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.8 ஆயிரத்து 400 என் பது குறிப்பிடத்தக்கது.