states

மணிப்பூரில் கலவரம் செய்பவர்களுக்கு மாநில அரசே உடந்தையாக இருக்கிறது!

ஆளும் பாஜக எம்எல்ஏ பகிரங்க குற்றச்சாட்டு

இம்பால், ஜூலை 24 - மணிப்பூர் வன்முறைச் சம்பவங் களில் ஈடுபடும் கலவரக்காரர்களுக்கு மாநில அரசே உடந்தையாக இருப்ப தாக, பாஜக-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே பகிரங்க குற்றச் சாட்டை முன்வைத்துள்ளார். பவோலியன்லால் ஹொக்கிப் என் பவர்தான் அந்த எம்எல்ஏ ஆவார். இவர் சூரசந்த்பூர் மாவட்டம், சைகோட்டை தொகுதி எம்எல்ஏ-வாக உள்ளார். குக்கி  பழங்குடியின இனத்தை சேர்ந்த இவர், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.  அதில், “மணிப்பூரில் இனக்குழு வுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடங்கிய பிறகு  அதனைப் போதைப்பொருள் கும்ப லுக்கு எதிரான நடவடிக்கையாக சித்த ரிக்க முதல்வர் முயன்றார். இதன் மூலம் மணிப்பூர் வன்முறைக்கு முதல்வர் மறைமுகமாக ஆதரவாக இருப்பது தெளிவாக தெரியும்.  மேலும் மணிப்பூரில் வசிக்கும் குக்கி இன மக்களை போதைப்பொருள் கும்பல் என சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது. தற்போதைய சூழலில், பழங்குடியினரின் நிலத்தை உரிமை கொண்டாடும் போராக இதனை பார்க்க வேண்டும். மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங், ‘மெய்டெய் லீபுன்’ மற்றும் ‘ஆரம்பாய் தெங்கோல்’ போன்ற பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ளார்.  எனவே, நாங்கள் (குக்கி சட்டமன்ற உறுப்பினர்கள்) பிரதமர் மோடியை சந்திக்க முயற்சித்து வருகிறோம். ஏனென்றால் வன்முறையை ஒன்றிய அரசால்தான் கட்டுப்படுத்த முடியும்  என நம்புகிறோம்’’ என தெரிவித்துள் ளார். மணிப்பூர் வன்முறை குறித்து,

பிரதமர் நரேந்திர மோடி, 78 நாட்களுக்கு பிறகே வாய்திறந்தார். 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வந்த பிறகு “மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. இந்த  சம்பவத்தால் கோபம் நிரம்பி இதயம் வலிக்கிறது. எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என உறுதியளிக் கிறேன். இந்த சம்பவத்தை ஒருபோ தும் மன்னிக்க முடியாது’’ என தெரி வித்தார்.  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த செயலையும் பாஜக  எம்எல்ஏ பவோலியன்லால் ஹொக்கிப் விமர்சித்துள்ளார். “79 நாட்களைப் பற்றி  மறந்துவிடுங்கள், இதுபோன்ற மிகப்பெரிய வன்முறை குறித்து, பிரத மர் மோடி, ஒரு வாரம் கழித்துப் பேசி யிருந்தால் கூட, அது தாமதம்தான்.  அவர் தவறான விஷயங்களுக்கு (அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய வெளி நாட்டுப் பயணங்களுக்கு) முன்னு ரிமை அளித்துள்ளார். இந்தப் பய ணத்திற்கு முன்னதாகவே பிரதமரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், முடியவில்லை. மக்கள் கொல்லப்படும் விஷயத்தைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதே மனிதநேயம். மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் பிரதமரைச் சந்திக்க முயற்சி செய்தோம். ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இன்று வரை, நிலைமையின் தீவிரத்தை அவருக்குத் தெரிவிக்கும் வாய்ப்பிற்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்” என்றும் பாஜக எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளார்.