பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலை யில், பதோஹியைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை பேய் ஓட்டுவதாக கூறி பூசாரி ஒருவர் கோவில் அறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்ப வம் கடும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் உடல்நிலை சரியில்லா மல் அவதிப்பட்டுள்ளார். பெற் றோர் மோதிலால் என்ற பூசாரியிடம் அழைத்துச் சென்றனர். பூசாரி, அப்பெண்ணின் உடலில் பேய் இருப்பதாக கூறி ரூ. 4000 கட்டணமும்,பெண்ணை தனியாக வைத்து சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பி மோதிலாலுடன் பெற்றோர் அனுப்பி வைத்தனர். தர்வாசி கிராமத்திற்கு டூவீல ரில் அழைத்துச் சென்று அங்குள்ள கோவில் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத் காரம் செய்தார் பூசாரி. இதை வெளியே சொன் னால் கொலை செய்து விடுவேன் என்று பூசாரி மிரட்டியுள்ளார். ஆனால் தனக்கு நடந்த கொடுமை குறித்து அப்பெண் பெற்றோரிடம் கூற, பூசாரி மோதிலால் மீது காவல்துறையில் புகார் அளிக்கப் பட்டது. இதையடுத்து நடத் தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டது உறுதியான நிலையில், பூசாரி மோதிலாலை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்த னர்.