states

‘குடும்பம் பட்டினியால் வாடுகிறது’ எனக் கூறி உச்சநீதிமன்றம் முன்பு தீக்குளித்த நபர்

புதுதில்லி,ஜன.23- தனது குடும்பம் பசி பட்டினியால் வாடுவதாக கூறி நபர் ஒருவர் தில்லியில் உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.  தில்லியின் நொய்டாவைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உச்சநீதி மன்றத்திற்கு வெளியே தரையில் உருண்டு அழும் வீடியோ ஒன்று அங்கிருப்பவர்களால் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது அவர், “நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்; என் குடும்பம் வறுமையில் வாடு கிறது’’ என்று கூறிவிட்டு, தீக்குளித்துள்ளார். உடனே அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த நபர் தனது தனிப்பட்ட வாழ்க்கை யில் சில பிரச்சனைகளை எதிர்கொள்வதால் உச்ச நீதிமன்றத்திற்கு வந்ததாகவும், அவரி டம் விரிவாக பேசவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது உடல்நிலை குறித்து தகவல் ஏதும் வெளி யாகவில்லை.