புதுதில்லி, மார்ச் 26- காஷ்மீர் பண்டிட்டுகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலை, படமாக எடுக்கிறேன் என்ற பெயரில், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற திரைப் படத்தை இயக்கியிருப்பவர் பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. ஆனால், இந்தப் படம் இஸ்லாமி யர்க்கு எதிராக வெறுப்பையும், வன் முறையையும் தூண்டுவதாக கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கி றது. இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரியோ, அவற்றுக்கு முறை யாக பதிலளிக்காமல், விமர்சகர்கள் மீது கோபத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி வருகிறார். இவை ஒருபுறமிருக்க, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இயக்கு நர் விவேக் அக்னிஹோத்ரி ஓரிரு நாட்களுக்கு முன்பு பேட்டி அளித் துள்ளார். அந்தப் பேட்டியில், “நான் மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த வன்தான். ஆனால், யாரிடமும் அவ் வாறு சொல்வதில்லை. ஏனெனில், போபாலை சேர்ந்தவர்கள் என் றாலே பொதுவாக ஓரினச் சேர்க்கை யாளர்கள் என்ற கருத்து இருக்கிறது. ஒருவேளை, அவர்களின் நவாபி ஸ்டைல் வாழ்க்கை முறையால் கூட அதுபோன்ற எண்ணம் வந்திருக்க லாம்” என்று கூறி சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளார். அவரது கருத்துக்கு மத்தியப்பிரதேச மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அக்னிஹோத்ரியின் இந்தப் பேச்சை, மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலை வருமான திக்விஜய் சிங்கும் கண் டித்துள்ளார். “விவேக் அக்னி ஹோத்ரி, நீங்கள் சொல்வது உங்கள் சொந்த அனுபவமாக இருக்கலாம். ஆனால், அனைத்து போபால்வாசி களுக்கும் அது பொருந்தாது. உங்க ளுடன் இருக்கும் நபர்களை (சங்-பரிவாரங்கள்) பொறுத்து கூட இந்த எண்ணம் உங்களுக்கு தோன்றியி ருக்கலாம். இனி எச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள்” என்று விளாசி யுள்ளார்.