states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

மோடி அரசாங்கம் தேசிய வளங்களை கொள்ளையடிக்கிறது. தனது நெருக்கமான கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கிறது. சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் எனும் மத்திய பொதுத்துறை நிறுவனத்திற்கு ரூ.1592 கோடி ஆர்டர் உள்ளது. அதன் நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.650 கோடி. ஆனால் அதன் மதிப்பை 210 கோடி என நிர்ணயித்து விற்பனை! வாங்கியது உற்பத்தியில் அனுபவம் இல்லாத நந்தால் நிதி நிறுவனம். அது உத்தரப்பிரதேச  பா.ஜ.க. பொருளாளருக்கு நெருக்கமானது. கிரிமினல் மோசடி!பகற் கொள்ளை!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு! 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் உருவாக்கப் போவதாக மோடி அரசாங்கம் டமாரம் அடித்துக் கொள்கிறது. ஆனால் ரூபாய் மதிப்பு 2017  ஆம் ஆண்டிலிருந்து 17.5 சதவீதம் வீழ்ச்சி! டாலர் மதிப்பில் ரூ.2 சரிந்தாலும் ஜி.டி.பி.யில் ரூ.77 லட்சம் கோடி இழப்பு என பொருள்.  மோடிஜி அவர்களே! 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமா? தயவு செய்து இந்த மோசடி பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.