காலநிலை மாற்றத் தால் உலகில் ஒவ்வொரு பகுதி யிலும், ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 143 ஆண்டுகளில் இல்லாத அள வில் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் கோடார்ட் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் ஸ்டடீஸ் (ஜிஐஎஸ்எஸ்) விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி,”1880 ஆம் ஆண்டில் இருந்து உலகளாவிய வெப்பநிலை பதிவுகளை ஒப்பிடும் பொழுது 2023ஆம் ஆண்டின் கோடை காலமே பூமியின் மிகவெப்பமான கோடை காலமாக இருந்தது. கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மற்ற ஆண்டுகளின் கோடைக்காலத்தை விட 0.41 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகமாக இருந்தது. முக்கியமாக 1951 முதல் 1980 வரை யிலான காலகட்டத்தின் கோடையை விட (டிகிரி பாரன்ஹீட்) 2.1 நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் 2.2 ஆக டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை எதிர்கொண்டது. இந்த வெப்பநிலை வடஅரைக்கோளத்தில் மிகமோசமான அளவில் இருந்ததாகவும் நாசா எச்சரித்துள்ளது.