states

img

அரசின் ‘கடுமையான’ நடவடிக்கை இளைஞர்களின் கோபத்தை தீவிரப்படுத்தும்

அரசின் ‘கடுமையான’ நடவடிக்கை இளைஞர்களின் கோபத்தை தீவிரப்படுத்தும்

ஆபரேசன் சிந்தூர் தாக்கு தல் தொடர்பாக விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்த தற்காக கைது செய்யப்பட்ட மாணவி க்கு ஜாமீன் வழங்கியது மகாராஷ் டிரா நீதிமன்றம். மேலும் இந்த வழக்கில் மாணவி யிடம் அரசு நடந்து கொண்ட விதத்தை நீதிமன்றம் கடுமையாக கண்டித்த துடன், அரசின் கடுமையான நடவ டிக்கை இளைஞர்களின் கோபத்தை மேலும் தூண்டத்தான் செய்யும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை யின் போது அதனை விமர்சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த தற்காக 19 வயது பொறியியல் மாணவியை மகாராஷ்டிரா அரசு கைது செய்தது. மாணவி தனது பதிவை நீக்கி மன்னிப்புக் கோரிய பிறகும் கூட, அவரை மோசமான குற்றவாளியைப் போல நடத்தியது “முற்றிலும் அதிர்ச்சியளிக்கின்றது”. ஒரு அரசாங் கம்  ஒருமாணவியை இப்படி கைது செய்யலாமா?ஒரு அரசாங்கம் மாண வர்கள் கருத்துகள் சொல்வதை  தடுக்க வேண்டுமா? இதுபோன்ற கடுமையான நடவடிக்கை மாணவர்க ளை மேலும் தீவிரமாக்கும் என்று நீதிமன்றம் அரசாங்கத்தை கடிந்து கொண்டுள்ளது.  மேலும் அம்மாணவி விளக்கம் அளிக்கக் கூட அவகாசம் கொடுக்கா மல், அவரை கல்லூரியிலிருந்து நீக்கி யதற்காக கல்லூரி நிர்வாகத்தையும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித் துள்ளது.