புதுதில்லி,பிப்.27- ஒன்றிய கல்வி அமைச்ச கத்தின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல் படுகின்றன. ராணுவத்தினர், ஒன்றிய, மாநில அரசின் அலு வலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மீத முள்ள இடங்கள் மற்றவர் களுக்கு ஒதுக்கப்படும். இந்த பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் போது அந்த ஆண்டு மார்ச், 31 அல்லது ஏப்ரல் 1ல், 5 வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற விதி, பல ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில் வரும், 2022- 23 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள், புதிய கல்வி கொள்கையின்படி, 6 வயதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு 6 வயது முடிந்திருக்க வேண்டுமா அல்லது 5 வயது முடிந்து, 6 வய தில் இருக்க வேண்டுமா என்ற தெளிவாக குறிப்பிடப்பட வில்லை. ஏற்கனவே, 5 வயது நிறைவடைந்தால் போதும் என்ற நிலையில் தற்போது ஒன்றாம் வகுப்பில் சேர்க்க 6 வயது நிறைவடைய வேண்டும் என, திடீரென வயது வரம்பை உயர்த்து வதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ஆண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளி களில் சேர முடியாத நிலை ஏற்படும் . இதனால் மாணவர் களின் பெற்றோர்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். கூடுதல் விப ரங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை kvsangathan.nic.in/ என்ற இணை யதளத்திலும், ஆன்லைன் பதிவு விபரங்களை, kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத் திலும் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.