உ.பி. மாநிலம் உன் னாவ் தொகுதி பாஜக எம்.பி.யாக இருப்பவர் சாக்ஷி மகராஜ். இவர், உத்தரகண்ட்டின் ரிஷி கேஷ் நகர் ரயில்வே சாலையில் பகவான் பவன் எனும் ஆசிரமத் தில், கொரோனா விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக துணை ஆட்சியர் அபூர்வா பாண்டே அளித்த புகாரின் பேரில், பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.