states

பிபிசி ஆவணப் பட தடைக்கு எதிரான வழக்கு பிப் 6-இல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

புதுதில்லி, ஜன. 30 - பிரதமர் நரேந்திர மோடி தொடர் பான பிபிசி ஆவணப் படத்தை வெளி யிடுவதற்கு ஒன்றிய அரசு விதித்த தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத் தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு, பிப்ரவரி 6-ஆம் தேதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட உள்ளது. 2002-ஆம் ஆண்டு குஜராத் மதக்கலவரத்தில் அன்றைய முதல்வ ராக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பிருப்பதாக, ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ (“India: The Modi Question”) என்ற தலை ப்பில், பிபிசி நிறுவனம் 2 பகுதி களைக் கொண்ட ஆவணப் படத்தை அண்மையில் வெளியிட்டது. ஆனால், இந்த ஆவணப்பட த்தை இந்தியாவில் சமூக வலை தளங்களான யூடியூப், டுவிட்ட ரில் வெளியிட ஒன்றிய அரசு தடை விதித்தது. இருப்பினும் நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகள் இந்த ஆவணப்படத்தை திரையிட்டு வரு கின்றன. தில்லி, கேரளா, மேற்கு வங்கம், தெலுங்கானா என பல மாநி லங்களில் பாஜக-வின் கடும் எதிர்ப்பு களுக்கு இடையே இந்த ஆவணப் படம் திரையிடப்பட்டது. தமிழ்நாட் டில், சென்னை வள்ளுவர் கோட்டத் தில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு போட்டி யாக பாஜக ஆதரவாளர்கள், காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை ஒளிபரப்பினர். 

இதனிடையே, 2002 குஜராத் கல வரம் தொடர்பான பிபிசி ஆவணப் படம் மீதான ஒன்றிய அரசின் தடை க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள் ளது. மூத்த வழக்கறிஞர் எம்.எல். சர்மா இந்த பொதுநல வழக்கைத் தொடர்ந்துள்ளார். ஒன்றிய அரசின் இந்த தடையானது அரசியல் சாச னத்துக்கு விரோதமானது என தமது மனுவில் எம்.எல். சர்மா சுட்டிக்காட்டி யுள்ளார். இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு அவர் முறையிட்டார்.  அதேபோல் பிபிசி ஆவணப்பட இணைப்புகளுடன் பதியப்பட்ட ட்விட்டர் பதிவுகள் நீக்கப்பட்டது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் என். ராம் மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தாக்கல் செய்த மனுக்களும் அடுத்த திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட இருக்கிறது. என்.ராம் மற்றும் பிரசாந்த் பூஷ னுக்காக ஆஜரான மூத்த வழக்கறி ஞர் சியு சிங், தகவல் தொழில் நுட்ப விதிகளின்படி அவசரகால அதி காரத்தைப் பயன்படுத்தி எவ்வாறு மனுதாரர்களின் ட்விட்டர் பதிவு கள் நீக்கப்பட்டுள்ளன என்று தெரி வித்தார். மேலும், ராஜஸ்தான் மாநி லத்தில் உள்ள அஜ்மீர் பல்கலைக் கழகத்தில் 2002-ஆம் ஆண்டு குஜ ராத் கலவரத்தில் அப்போதைய அம் மாநில முதல்வராயிருந்த நரேந்திர மோடியின் பின்னணி குறித்த ஆவணப் படத்தைப் பார்த்த மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, பிப்ரவரி 6-ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்டுள்ளது. 2002-இல் சபர்மதி எக்ஸ்பிரசின் 2 பெட்டிகளில் நிகழ்ந்த தீ விபத்து சம்பவத்தைக் காரணமாகக் காட்டி,  முஸ்லிம்களுக்கு எதிராக குஜ ராத்தில் பெரும் வன்முறை கட்ட விழ்த்து விடப்பட்டது. குழந்தை கள், முதியவர்கள் என ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். முஸ்லிம் பெண்கள் பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டனர். பல ஆயிரம் கோடி மதிப் பிலான சொத்துக்கள் சூறையாடப் பட்டன. இதுதொடர்பான வழக்கு களில் அன்றைய முதல்வர் நரேந்திர மோடி நேரடியாக குற்றம்சாட்டப் பட்டிருந்தார். ஆனால், அவர் மீதான  குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதா ரம் இல்லை என்று நீதிமன்றத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.