கே. வரதராஜன் நகர் (திருச்சூர்), டிச.16- அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செய லாளர் ஹன்னன்முல்லா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்டாக மாறிவிட்டது. விவசாய விளைபொருட் களுக்கு விற்பனை மையம் அமைக்க ஒன்றிய அரசு ஆர்வம் காட்டவில்லை. ஏகபோகங்களின் நலன்களுக் காக விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் நடவடிக்கை தொடர்கிறது. பழங்குடியினர் பகுதிகளில் இருந்து நிலத்தை அபகரிக்கும் முயற்சியும் நடக்கிறது. நில வெளியேற்றம்தான் அவர்களது குறிக்கோள். நிலம் இல்லாமல் கிராமப்புற விவசாயிகளும் பழங்குடியினரும் எப்படி விவசாயம் செய்ய முடியும்? தொழில்துறைக்கான அனைத்து பொருட்களுக்கும் குறைந்தபட்ச விலை உள்ளது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஏன் இப்படி ஒரு அமைப்பை உருவாக்கக்கூடாது? 90 சதவிகித விவசாயிகள் நஷ்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்படியே தொடர முடியாது. நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கேட்டார். ஆனால், மோடி பிரதம ரான பிறகும் அது நடைமுறைப்படுத்தப் படவில்லை. பருவநிலை மாற்றத்தால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழை, வறட்சி மற்றும் கனமழையால் பயிர்கள் நாசமாகின்றன. இந்தச் சூழ்நிலையில் பயனுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தேவை. விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நலிவுற்ற கிராமப்புற பெண் தொழிலாளர்களின் துயரத்தை அதிகரிக்கும். ஏராளமானோர் வேலைகளை இழக்கின்ற னர். ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளால் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஹன்னன் முல்லா கூறினார்.
நிலங்களைக் காக்க தீவிரப் போராட்டம்
இம்மாநாட்டில் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா முன்வைத்த அறிக்கை மூன்று பிரச்சனைகளில் கவனம் செலுத்தியது. கடந்த மாநாட்டிற்குப் பிறகு ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விவசாயப் பிரச்சனைகள், அனைத்து மாநிலங்களிலும் சங்கத்தை வலுப்படுத்துவது, சர்வதேச மற்றும் தேசிய விவகாரங்களில் விவசாயிகள் சங்கத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்துதல். இந்த அறிக்கை மீதான 765 பிரதிநிதிகளின் கருத்துக்களையும் முன்வைக்கும் விவாதம் புதன், வியாழக்கிழமைகளில் நடந்தது. இதில் முதல்நாள் 37 பேர், இரண்டாவது நாள் 25 பேர் என மொத்தம் 52 பேர் பங்கேற்றனர். வியாழனன்று மதியத்தோடு பொதுச்செயலாளர் அறிக்கை மீதான விவாதம் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து 3 நிபுணர்குழு பரிந்துரைத்த அறிக்கைகள் மீது வியாழன் பிற்பகல் மொத்த பிரதிநிதிகளும் 3 வெவ்வேறு குழுக்களாக விவாதித்து இறுதிப்படுத்தினர்.