states

img

பாஜக புல்டோசர் இனி நகராது

புதுதில்லி,மே 13- தில்லியில் சிறுபான்மையினரை புல்டோசர் மூலம் வேட்டையாடுவதை கண்டித்து இடதுசாரி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்எல்), ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக் தலைமையில் தில்லி துணைநிலை ஆளுநர் இல்லம் முன் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இப்பேரணியில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், ஆர்எஸ்எஸ்-பாஜக புல்டோசர்கள் சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளின் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் அழித்து வருவதைச் சாடினார். தொழிலாளர் வர்க்கம் வரும் நாட்களில் இதற்கு பதிலளிக்கும் என்றும், அவர்களுக்கு முன்னால் புல்டோசர்கள் நகர முடியாது எனவும் அவர் தெரிவித்தார். அமர்ஜித் கவுர், பினோய் விஸ்வம் எம்.பி., தினேஷ் வர்ஷ்னி (சிபிஐ), சுஜேதா டே (சிபிஐ-எம்எல்), சத்ருஜீத் (ஆர்எஸ்பி), பிர்ஜு நாயக் (சிஜிபிஐ) ஆகியோர் பேசினர். 43 வெகுஜன அமைப்புகள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சனைகளில் பாஜக அரசுக்கு எதிராக பெருமளவில் மக்கள் பங்கேற்கும் நடவடிக்கைக்கும் பேரணி அழைப்பு விடுத்துள்ளது.