states

தொகுதிப் பங்கீடு அறிவிப்பை வெளியிட்டது ‘இந்தியா’ கூட்டணி

‘பாரதம் ஒன்றிணைந்தால்; இந்தியா வெல்லும்..!’

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளாகிய நாங்கள், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாகப் போட்டியிடு வதற்கு தீர்மானித்துள்ளோம். அதன்படி பல்வேறு மாநிலங்களிலும் தொகுதிப் பங்கீட்டு நடவடிக்கை உடனடியாகத் தொடங்கப்பட்டு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் கூடிய விரைவில் முடிக்கப்படும். ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், பொதுமக்களின் அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூடிய விரைவில் பொதுக்கூட்டங்களை நடத்தவும் முடிவு செய்துள்ளோம். மேலும், ‘பாரதம் ஒன்றிணைந்தால்; இந்தியா வெல்லும்’ (Judega BHARAT; Jeetega INDIA!) என்ற கருப்பொருளுடன் தொடர்புடைய தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மற்றும் பிரச்சாரங்களை பல்வேறு மொழிகளில் ஒருங்கிணைக்கவும் தீர்மானித்துள்ளோம்” என்று தீர்மானத்தில் கூறப்பட்டது.

புதுதில்லி, செப். 1 - மும்பையில் கூடிய ‘இந்தியா’ (Indian National Developmental Inclusive Alliance - INDIA) கூட்டணி யின் மூன்றாவது கூட்டம், 2024 மக்க ளவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை உடனடியாக துவங்குவ தாக அறிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் மக்கள்  சார்ந்த பிரச்சனைகளை மையமாக வைத்து மாபெரும் பொதுக்கூட்டங் களை நடத்தப் போவதாக அறி வித்துள்ள ‘இந்தியா’ கட்சிகள்,  தங்களின் கூட்டணிக்கு,  14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தேர்தல் வியூகக் குழுவையும் அமைத்துள்ளது. ஒருங்கிணைப்புக்குழு தவிர, 19 பேர் கொண்ட பிரச்சாரக் குழு, 12 பேர் கொண்ட சமூக ஊடகங்களுக் கான பணிக்குழு, 19 பேர் ஊடகங்களுக் கான பணிக்குழு, 11 பேர் ஆய்வுப் பணிக்குழு ஆகியவற்றையும் அமைத்துள்ளது.

63 தலைவர்கள்

எதிர்க்கட்சிகளின் கூட்டணி யான, ‘இந்தியா’வின் (I-N-D-I-A) மூன்றாவது கூட்டம், வியாழனன்று மாலை 6 மணிக்கு மும்பையில் உள்ள கிராண்ட் ஹையாட் ஹோட்ட லில் துவங்கியது. இந்தக் கூட்டத்தில் 28 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 63 தலைவர்கள் கலந்து கொண்டனர். முதல்நாளில் நடைபெற்ற அதி காரப்பூர்வ கூட்டத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று காலை 10.15 மணிக்கு அதிகாரப்பூர்வ ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டம் துவங்கியது. முதலாவதாக தலை வர்களின் குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. 10.30 மணிக்கு கூட்டம் துவங்கிய நிலையில், ‘சந்திரயான்-3’ வெற்றி யை நிகழ்த்திக் காட்டியதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தலைவர் களின் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது. 

இதில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செய லாளர் து. ராஜா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக தலைவரும் தமிழ்நாடு முதல் வருமான மு.க. ஸ்டாலின், திரிணா முல் தலைவரும் மேற்குவங்க முதல் வருமான மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதாதளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக வந்த் மான், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், ராஷ்ட் ரிய லோக்தளம் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங்,  அமைச்சர் சஞ்சய் குமார் ஜா உள்ளிட் டோர் பங்கேற்று தங்களின் ஆலோ சனைகளை வழங்கினர். பிற்பகல் 2 மணிவரை நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில், 2024 மக்களவைத் தேர்தலில் இயன்ற வரை ஒன்றிணைந்து போட்டியிடு வது; பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை களை உடனடியாகத் துவங்கி கூடிய விரைவில் முடிப்பது ‘பாரதம் ஒன்றி ணைந்தால்; இந்தியா வெல்லும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, தகவல் தொடர்பு ஊடகங்கள் மூலம்  பல்வேறு மொழிகளில் உடனடியாக பிரச்சாரத்தில் இறங்குவது என்று  முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு

‘இந்தியா’ கூட்டணிக்கு 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தேர்தல் வியூகக் குழுவும் (Coordination Committee and  Election Strategy Committee), மும்பை கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. 1. கே.சி. வேணுகோபால் (காங்கி ரஸ்), 2. சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), 3. டி.ஆர். பாலு (திமுக), 4. சஞ்சய் ராவத் (சிவசேனா), 5. தேஜஸ்வி யாதவ் (ஆர்ஜேடி), 6. அபிஷேக் பானர்ஜி (திரிணாமுல்), 7.  ராகவ் சத்தா (ஆம் ஆத்மி), 8. ஜாவேத்  அலி கான் (சமாஜ்வாதி), 9. லாலன் சிங் (ஜேடி-யு), 10. ஹேமந்த் சோரன் (ஜேஎம்எம்), 11. து. ராஜா (சிபிஐ),  12. உமர் அப்துல்லா (தேசிய மாநாடு), 13. மெகபூபா முப்தி (பிடிபி) ஆகியோர் இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இடம்பெறவுள்ள பிரதிநிதியின் பெயர் பின்னர் அறி விக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டது. ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தேர்தல் வியூகக்குழு மட்டுமல்லா மல், பிரச்சாரக் குழு (Campaign Com mittee), சமூக ஊடகங்களுக்கான பணிக்குழு (Working Group for Social Media), ஊடகங்களுக்கான பணிக்குழு (Working Group for Media), ஆய்வுப் பணிக்குழு (Working Group for Research) ஆகிய மேலும் 4 குழுக்களும் அமைக்கப்பட்டன.

பிரச்சாரக் குழு

பிரச்சாரக் குழுவில் 1. குர்தீப் சிங்  சப்பல் (காங்கிரஸ்), 2. சஞ்சய் ஜா,  (ஜேடி-யு, 3. அனில் தேசாய் (சிவ சேனா), 4. சஞ்சய் யாதவ் (ஆர்ஜேடி),  5. பி.சி. சாக்கோ, (என்சிபி), 6. சம்பை  சோரன் (ஜேஎம்எம்), 7. கிரண்மோய் நந்தா (சமாஜ்வாதி), 8. சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி), 9. அருண்குமார் (சிபிஐ-எம்), 10. பினோய் விஸ்வம் (சிபிஐ), 11. ஹஸ்னைன் மசூடி (தேசிய மாநாடு), 12. ஷாஹித் சித்திக் (ஆர்எல்டி), 13. என்.கே. பிரேமச்சந்திரன் (ஆர்எஸ்பி), 14. ஜி. தேவராஜன் (பார்வர்ட் பிளாக்), 15. ரவி ராய் (சிபிஐ-எம்எல்), 16. தொல். திருமாவளவன் (விசிக), 17. கே. எம். காதர் மொய்தீன் (ஐயுஎம்எல்), 18. ஜோஸ் கே.மணி (கேசி-எம்) ஆகி யோர் இணைக்கப்பட்டனர்.

சமூக ஊடகங்களுக்கான பணிக்குழு

சமூக ஊடகங்களுக்கான பணிக் குழுவில், 1. சுப்ரியா ஸ்ரீனடே (காங்கி ரஸ்), 2. சுமித் சர்மா (ஆர்ஜேடி), 3.ஆஷிஷ் யாதவ் (சமாஜ்வாதி), 4.ராஜீவ் நிகம் (சமாஜ்வாதி), 5. ராகவ் சத்தா (ஆம் ஆத்மி), 6. அவிந்தானி  (ஜேஎம்எம்), 7. இல்திஜா மெகபூபா (பிடிபி), 8. பிரஞ்சால் (சிபிஐ-எம்),  9. டாக்டர் பாலசந்திரன் காங்கோ (சிபிஐ), 10. இப்ரா ஜா (தேசிய மாநாடு), 11. வி. அருண் குமார் (சிபிஐ-எம்எல்) ஆகியோர் இணைக் கப்பட்டனர்.

ஊடகப் பணிக்குழு

ஊடகப் பணிக்குழுவில், 1. ஜெய்ராம் ரமேஷ் (காங்கிரஸ்), 2. மனோஜ் ஜா, (ஆர்ஜேடி), 3. அர விந்த் சாவந்த் (சிவசேனா), 4. ஜிதேந் திர அஹ்வாத் (என்சிபி), 5. ராகவ்  சத்தா (ஆம் ஆத்மி), 6. ராஜீவ் ரஞ்சன் (ஜேடி-யு), 7. பிரஞ்சால் (சிபிஐ-எம்), 8. ஆஷிஷ் யாதவ் (சமாஜ்வாதி), 9. சுப்ரியோ பட்டாச்சார்யா (ஜேஎம் எம்), 10. அலோக் குமார் (ஜேஎம்எம்), 11. மணீஷ் குமார் (ஜேடி-யு), 12. ராஜீவ் நிகம் (சமாஜ்வாதி), 13. டாக்டர் பாலசந்திரன் காங்கோ (சிபிஐ), 14. தன்வீர் சாதிக் (தேசிய மாநாடு), 15.  பிரசாந்த் கண்ணோஜியா, 16. நரேன் சாட்டர்ஜி (பார்வர்ட் பிளாக்), 17. சுசேதா டி (சிபிஐ-எம்எல்), 18. மோஹித் பான் (பிடிபி) ஆகியோர் இணைக்கப்பட்டனர்.

ஆய்வுப் பணிக்குழு

ஆய்வுப் பணிக்குழுவில், 1. அமி தாப் துபே (காங்கிரஸ்), 2. பேரா சிரியர் சுபோத் மேத்தா (ஆர்ஜேடி), 3.  பிரியங்கா சதுர்வேதி (சிவசேனா), 4. வந்தனா சவான் (என்சிபி), 5.  கே.சி. தியாகி (ஜேடி-யு), 6. சுதிவ்ய  குமார் சோனு (ஜேஎம்எம்), 7. ஜாஸ் மின் ஷா (ஆம் ஆத்மி), 8. அலோக் ரஞ்சன் (சமாஜ்வாதி), 9. இம்ரான் நபி தார் (தேசிய மாநாடு), 10. ஆதித்யா (பிடிபி) ஆகியோர் இணைக்கப்பட்டனர். இந்த நான்கு குழுக்களிலும் திரி ணாமுல் காங்கிரஸ் சார்பில் தலா ஒரு வர் இணைக்கப்படவுள்ள நிலையில், அவர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.