states

img

என்னை உண்மையான சோசலிஸ்ட் என்ற பிரதமர் மோடிக்கு நன்றி!

பாட்னா, பிப்.15- “என்னை உண்மையான சோசலிஸ்ட் என்று கூறிய பிரத மர் மோடிக்கு நன்றி” என ஐக் கிய ஜனதாதளம் கட்சித் தலை வரும், பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவருமான நிதீஷ் குமார் குலைந்துள்ளார். உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டி ரிய ஜனதா தளம் கட்சித் தலை வருமான லாலு பிரசாத் யாதவை விமர்சித்திருந்தார். “லாலு பிர சாத் போன்றோர் எல்லாம் சோச லிஸ்டுகள் அல்ல. இவர்கள் வாரிசு அரசியல் செய்பவர்கள். குடும்ப நலனில் மட்டுமே அக்கறை கொண்டவர்கள். லோகியாவின் வழி நின்றவர் களே உண்மையான சோச லிஸ்டுகள். லோகியாவின் குடும்ப உறுப்பினர்களோ, ஜார்ஜ் பெர்னாண்டசின் குடும்ப உறுப்பினர்களோ, நிதிஷ் குமாரின் குடும்ப உறுப்பினர் களோ எங்காவது கட்சி அரசி யல் அதிகாரத்தில் வந்து நீங்கள் பார்த்துள்ளீர்களா. இவர்கள் தான் உண்மையான சோச லிஸ்டுகள்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், “நாங்கள் எங்கள் மாணவப் பருவத்தி லேயே சோசலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அரசியலில் நுழைந் தோம். எங்களின் அரசியல்  நேர்மையை புரிந்துகொண்டு, பிரதமர் பேசியுள்ளது மகிழ்ச்சி  தருகிறது. பிரதமரின் இந்த பாரா ட்டுக்கு நன்றி” என்று நிதிஷ் குமார் நெக்குருகியுள்ளார்.