விவசாயிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தெலுங்கு தேச குண்டர்கள்
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளார். இந்நிலையில், ஆந்திராவின் பிரகா சம் மாவட்டத்தின் பொடிலி பகுதியில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப் பட்டுள்ள புகையிலை விவசாயிகள், தங்கள் விளைபொருட்களுக்கு நியாய மான விலை கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். 2 நாட்களுக்கு முன் போ ராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஒரு குழுவை அமைத்து, போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றனர். புகையிலை விவசாயிகள் தங்களது நிலைமைகள் மற்றும் போராட்டத்தின் தன்மைகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, திடீரென போராட்டக் களத்திற்குள் புகுந்த 40க்கும் மேற்பட்ட குண்டர்கள், விவசாயிகள் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் விவசாயிகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தெலுங்கு தேச குண்டர்கள் இத்தகைய சூழலில், புகையிலை விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது தெலுங்கு தேச குண்டர்கள் என ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில்,”பொடிலியில் புகையிலை விவசாயிகளை எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்திக்கச் சென்ற போது, ஆந்திர முதல மைச்சர் சந்திரபாபு நாயுடுவின் உத்தர வின் பேரில் 40 தெலுங்கு தேச குண்டர் கள் கல்வீச்சு சம்பவம் மூலம் வன் முறையைத் தூண்டியுள்ளனர். புகையிலை விவசாயிகளின் பிரச்சனையில் இருந்து கவனத்தை திசைதிருப்ப தெலுங்கு தேசம் வன் முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது” என அவர் குற்றம் சாட்டினார்.
பாஜக பாணியில் தெலுங்கு தேசம்
மோடி பிரதமர் ஆன பின்பு விவசாயிகளு க்கு எதிரான அடக்கு முறை மிக மோசமான அளவில் அதிகரித்துள்ளது. வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மோடி அரசு நடத்திய தாக்குதலில் 800 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயி ரிழந்தனர். அதே போல உத்தரப்பிர தேசத்தில் போராட்டம் நடத்திய விவ சாயிகள் மீது ஒன்றிய பாஜக அமைச்சர் மகன் நடத்திய தாக்குத லில் பல விவசாயிகள் உயிரிழந்த னர். இதே போல பாஜக ஆளும் மாநி லங்களில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் நிகழும் விவசாயி களுக்கு எதிரான அதே அடக்கு முறையை தெலுங்கு தேசம் கட்சி தொடங்கியுள்ளது. நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போ ராட்டம் நடத்திய புகையிலை விவசா யிகள் மீதும், விவசாயிகளை சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சியினர் மீதும் தேசிய ஜனநாயக கூட்ட ணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேச அரசு தாக்குதல் நடத்தியுள் ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத் ததால் தெலுங்கு தேசம் விவசாயிக ளுக்கு எதிரான அடக்குமுறையை கையாண்டு வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.