2 ஆண்டுகளுக்கு ஒருமுறை துபாயில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும் நிலையில், நடப்பாண்டிற்கான விமான கண்காட்சி நவம்பர் 13 முதல் 17 வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் பங்கேற்க இந்திய விமானப்படை குழு துபாய் சென்றுள்ள நிலையில், தேஜாஸ் போர் விமானம், துருவ் ஹெலிகாப்டர் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் புதனன்று மாலை பலத்த பாதுகாப்புடன் தரையிறங்கியது.