போயிங் விமான நிறுவனத்தை கூறி தப்பிக்க டாடா முயற்சி
விபத்துக்குள்ளான “ஏர் இந்தியா” விமானம் போயிங் நிறுவனத்திற்குச் (அமெரிக்காவின் தயாரிப்பு) சொந்தமானது ஆகும். இந்த விமானம் 11.5 வயதை கொண்டது. அதாவது 2014ஆம் ஆண்டே போயிங் நிறுவனம் ஏர் இந்தியாவிற்கு “போயிங் 787-8 ட்ரீம்லைனர் இரட்டை எஞ்சின்” விமானத்தை வழங்கிவிட்டது. அதன்பிறகு 2021ஆம் ஆண்டு ஏர் இந்தியாவை பாஜகவிற்கு நன்கொடையை அள்ளிக் கொடுக்கும் டாடா நிறுவனம் வாங்கியது. தற்போது ஏர் இந்தியா விமானங்கள் அனைத்தும் டாடா வசம் தான் உள்ளது. நிலைமை இவ்வாறு உள்ள நிலையில் டாடா தலைவர் சந்திரசேகர்,”விமான விபத்து தொடர்பாக போயிங் நிறுவன அதிகாரிகளின் ஒத்துழைப்பை நாடியுள்ளோம். மேலும் விபத்து தொடர்பாக போயிங் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம்” என அவர் கூறினார். சாக்குபோக்கு ஏர் இந்தியா விமானங்கள் அனைத்தும் டாடா வசம் உள்ள நிலையில், பராமரிப்பு மற்றும் இயக்கத்தை டாடா நிறுவனமே கவனித்து வருகிறது. அதனால் விமான விபத்து நிகழ்ந்த பின், விபத்துக்குள்ளான விமானத்தில் என்ன பராமரிப்பு குறைபாடு இருந்தது? இயந்திரத்தில் என்ன குறைபாடு இருந்தது? என்பதை டாடா தான் விளக்கம் அளிக்க வேண்டும். அதற்கு டாடா தான் முழு பொறுப்பு ஆகும். ஆனால் டாடா தலைவர் சந்திரசேகர் போயிங் விமான நிறுவனத்தை முதன்மை காரணப் பொருளாகக் கூறி தப்பிக்க முயற்சிப்பது மிக மோசமானது ஆகும்.
முட்டுக் கொடுக்கும் “கோடி மீடியா” '
விபத்துக்குள்ளான விமானம் 11.5 ஆண்டுகள் செயல்பட்ட பழமையானது. அதனால் தான் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது என பாஜகவிற்கு ஆதரவாக புரளியை கிளப்பும் “கோடி மீடியா” ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. ஆனால் உண்மையில் ஒரு விமானம் நன்றாக பராமரிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை இயக்கப்படலாம். விமானத்தின் வயது ஒன்றும் பிரச்சனை இல்லை என விமானத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் விபத்துக்குள்ளான விமானத்தின் ஆயுள் காலம் பற்றிய “கோடி மீடியா” ஊடகங்களின் புரளி நிராகரிக்கப்பட்டுள்ளது.