states

img

சோபியா மீதான வழக்கு ரத்து

2018 இல் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன், சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவர் வந்த அதே  விமானத்தில் கனடாவில் படிக்கும்  ஆராய்ச்சி மாணவியான லூயிஸ்  சோபியா என்பவரும் பயணித்திருந் தார். இந்நிலையில், தமிழிசை சவுந்தர்  ராஜன் விமானத்தை விட்டு நடந்து சென்றபோது, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாஜகவுக்கு தனது கண்ட னத்தைத் தெரிவிக்கும் விதமாக, மாணவி சோபியா ‘பாசிச பாஜக ஆட்சி  ஒழிக!’ என உரத்து முழக்கங்களை எழுப்பினார்.  இதனால் எரிச்சலடைந்த தமி ழிசை சவுந்தர்ராஜனும், அவரது ஆத ரவாளர்களும் மாணவி சோபியாவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை மிரட்டினர். அத்துடன், மாணவி சோபியா மீது காவல்துறையிலும் புகார் அளித்தனர். அதன்பேரில் அன்றைய எடப்பாடி அர சின் காவல்துறையும், மாணவி மீது வழக்குப்பதிவு செய்தது. இதற்கு எதி ராக, தன்மீதான வழக்கையும், குற் றச்சாட்டையும் ரத்துசெய்யக் கோரி, மாணவி சோபியா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இதனிடையே, தமிழிசை சவுந் தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால், அவர் வழக்கி லிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தூத்துக்குடி விமான நிலைய  இயக்குநர் எதிர்மனுதாரராக சேர்க்கப் பட்டார். பின்னர் இந்த வழக்கில் பாஜக  தலைவர் அண்ணாமலையும் இணைந்து கொண்டார். அவர் வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், நீதிபதி பி. தனபால்  முன்பு புதனன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்ற வியல் வழக்கறிஞர் ஆர்.எம். அன்பு நிதி, “இந்த வழக்கில், சென்னை சிட்டி  போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்டப்  பிரிவினை, தூத்துக்குடி போலீசார் பயன்படுத்தி உள்ளனர். இது சென்னை,  கோவை, மதுரை, காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்  துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது. அதற்கான அதிகாரம் இல்லை” என தெரிவித்தார். இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி தனபால், சோபியா மீது  பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். சென்னை உயர் நீதிமன்ற மது ரைக்கிளையின் இந்த தீர்ப்பு பல்வேறு  தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், மாணவி லூயிஸ் சோபியாவும் தனது மகிழ்ச்சியைத் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்ட ரில் தனது கருத்தைப் பதிவிட்டிருக்கும் சோபியா, “இது ஒரு கடினமான போராட்டமாக இருந்தது” எனக் குறிப்  பிட்டுள்ளார்.