states

இந்தியில் பெயரிட்டுள்ள ஜனநாயக விரோத மசோதாக்களை வாபஸ் பெறுக!

சென்னை,ஆக.17-  நீதிபரிபாலன முறையில்  மிகப்பெரிய தாமதத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள, இந்தியில் பெய ரிட்டுள்ள ஜனநாயக விரோத மூன்று மசோ தாக்களை ஒன்றிய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயல் தலைவர் ஏ.கோதண்டம், பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்திய தண்டனை சட்டம் (Indian penal code), குற்றவியல் நடைமுறை சட்டம் (code of Criminal Procedure)  மற்றும் இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act) ஆகிய மூன்று சட்டங்களை யும் மறுசீரமைக்கும் மூன்று மசோதாக் களை ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் 12 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பழைய சட்டங்களுக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மசோதாக்களுக்கு முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக ரிக் சுரக்‌ஷா, மற்றும் பாரதிய சாக் ஷ்யா என்று இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது. மேற்படி மூன்று மசோதாக்களும் நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் அறிமுகம் செய்யப்பட்டு நிலைக்குழுவின் (standing committee) ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்தியில் பெயரிட்டது ஜனநாயக விரோத நடவடிக்கை 

மூன்று மசோதாக்களுக்கும் இந்தி யில் பெயரிடுவது என்பது ஒன்றிய பாஜக  அரசின் அப்பட்டமான இந்தி திணிப்பு நட வடிக்கையாகும். காலனி ஆதிக்க சிந்த னையை ஒழிப்பதாகச் சொல்லி அதற்கு மாற்றாக  இந்தி மொழி ஆதிக்கத்தை  இதன் மூலம் நிலை நிறுத்துகிறது ஒன்றிய அரசு. மேற்படி ஒன்றிய அரசு அறிமுகப் படுத்தியுள்ள 3  மசோதாக்களில்  உள்ள சரத்துக்கள் அனைத்தும் ஆங்கில மொழி யிலேயே இருக்கும் நிலையில் மசோதா விற்கு இந்தியில் பெயரிடும் ஒன்றிய அர சின் நடவடிக்கை கேலிக் கூத்தாக  உள்ளது. இந்த மூன்று மசோதாக்களும் இதே பெயரோடு சட்டமாக நிறைவேற்றப் பட்டால் இந்தி பேசாத மாநிலங் களில் உள்ள மக்களுக்கும், வழக்காடிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் புரியாத ஒரு மொழியில் சட்டத்தின் பெயரை திணிக்கும் நடவடிக்கையாகவே அமையும்.  அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 348 இன் படி ஒன்றிய அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், சட்டங்கள் ஆங்கில மொழியிலேயே இருக்க வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது.  பொதுவாக ஒன்றிய அரசால் இயற்றப்படும்  சட்டங்கள் ஆங்கில மொழி யில்  நிறைவேற்றப்பட்டு ஆங்கிலத்தில் தான் அந்த சட்டத்தின் பெயர் இது வரை அறியப்பட்டு வந்துள்ளது. 

வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

மேற்படி ஆங்கிலத்தில் அறியப்படும் சட்டத்தின் பெயர்கள் இந்தியாவில் அந்தந்த மாநில அலுவல் மொழிகளில் (Official language)  மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. உதாரணமாக India penal code தமிழ்நாட்டில் இந்திய தண்டனை சட்டம் என்றும், Indian evidence Act இந்திய சாட்சிய சட்டம் என்றும், Code of Criminal Procedure குற்றவியல் நடை முறை சட்டம்   என்று தமிழ்நாட்டின் அலு வல் மொழியில் பயன்பாட்டில் உள்ளது. மேற்படி மசோதாக்களின் பெயர்கள் இந்தி மொழியில் குறிப்பிட்டிருக்கும்  ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு வழக் கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந் துள்ளது. மேற்படி மூன்று சட்டங்களுக் கும்  இந்தியில் பெயர் சூட்டும் நடவடிக்கை யை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும். 

நீதிபரிபாலன முறையில் தாமதத்தை ஏற்படுத்தும் 

காலனி ஆட்சி காலத்தில் உருவாக்கப் பட்ட சட்டங்களை மட்டும் அல்ல, சுதந்திர இந்தியாவில் இயற்றப்பட்ட பல சட்டங்களும் சமூகத்தில் ஏற்படும் மாற்றங் களுக்கு ஏற்றாற் போலும், தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் மாற்றங்களை கருத்தில் கொண்டும், பொருத்தமாக, ஜனநாயக வழிகளில் மக்கள் நலனை கருத்தில் கொண்டும் சட்ட திருத்தங்கள் மேற்கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை. காலனி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட  இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடை முறை சட்டம்  மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களும்  சுதந்திர  இந்தியாவில் ஏற்கனவே பலமுறை  திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள் ளன. தற்போது ஒன்றிய அரசு மேற்படி மூன்று சட்டங்களில் திருத்தங்கள் செய்வ தற்கு பதிலாக  அந்த சட்டத்தையே நீக்கி விட்டு புதிய சட்டத்தை புதிய பெயரில் உரு வாக்குவதற்காக மூன்று புதிய மசோ தாக்களை தாக்கல் செய்திருக்கிறது.  இது நீதிபரிபாலன முறையில் உடனடியாக பெரிய தாமதத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமையும்.  பொதுவாக அமலில் உள்ள சட்டங் களில் மாற்றங்கள் கொண்டு வருவதற் தற்கான தேவை குறித்து சட்ட கமிஷன் தான் அரசிற்கு பரிந்துரைகள் வழங்கும். மேற்படி மூன்று சட்டங்களுக்கு பதிலாக புதிய மசோதாக்களை நிறைவேற்ற  சட்ட ஆணையம் ஒன்றிய அரசிற்கு பரிந்துரை வழங்கியதாக ஒன்றிய அரசு தெரிவிக்கவில்லை. வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள், பார்கவுன்சிலிடமும் கருத்து கேட்காமல் எதேச்சதிகாரமாக மூன்று மசோதாக்களை நிறைவேற்றி இருப்பது ஜனநாயக விரோதமாகும்.

வெறுப்பு பேச்சுக்கு என்ன தண்டனை?

மேற்படி மசோதாக்களில் நிறைய  குறைபாடுகள் உள்ளதாக விமர்சனங் கள் எழுந்துள்ளன. காலனி காலத்தில் இந்திய தண்டனை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட தேசதுரோக சட்டம் பிரிவு 124A புதிய மசோதாவில் நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அந்த பிரிவு புதிய வடிவத்தில்  பிரிவு 150 வழியாக அமலுக்கு வந்துள்ளது. மேலும் விசாரணைக்காக  கைது செய்யபடும் குற்றவாளிகளை 15 நாள்  ரிமாண்ட்  என்பதை 60 நாள் வரை நீட்டித்திருப்பதற்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.  சமீப காலங்களில் இந்தியா முழுவதும் வெறுப்பு பேச்சு (Hate speech) மூலம் சமூக அமைதி பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வெறுப்பு பேச்சுக்கான தண்டனைகள் குறித்து புதிய மசோதாவில் குறிப்பிடப்படவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. தமிழ்நாடு- புதுச்சேரி வழக்கறி ஞர்கள் கூட்டமைப்பு மேற்படி மூன்று மசோ தாக்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 21 முதல் 31 ஆம் தேதி வரை நீதிமன்றங்கள் முன்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளதை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வரவேற்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.