புதுதில்லி, மே 11- பேரறிவாளனை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆளு நரின் சார்பில் ஒன்றிய அரசு ஆஜராவது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவா ளன் தரப்பில் விடுதலை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை புதனன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வ ரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணையின் போது, அமைச்சரவையின் முடிவை குடி யரசுத் தலைவருக்கு அனுப்பும் அதி காரம் ஆளுநருக்கு உள்ளதா? கடந்த முறை 2 முடிவுகளை தேர்வு செய்யக் கூறினோம். ஏதேனும் முடிவு எடுக்கப் பட்டுள்ளதா? ஆளுநர் சார்பில் ஒன்றிய அரசு ஆஜராவது ஏன் என்பதற்கு பதிலளியுங்கள். ஆளுநர், 2 அல்லது 3 ஆண்டுகள் பேர றிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்க வில்லை. ஆளுநர் முடிவெடுக்காமல் பல ஆண்டுகள் காலம் தாழ்த்தியதற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்? என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்தது.
இதுகுறித்து ஒன்றிய அரசு தரப்பில், ‘‘மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் வரும் வழக்குகளில் மட்டும் மாநில அரசு முடிவெடுக்கலாம். மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தும் வழக்குகளில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கே உள்ளது. குற்றவாளிகளுக்கான கருணை அல்லது நிவாரணம் தொடர்பாக ஒன்றிய அரசே முடிவெடுக்க முடியும் என்று வாதிடப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கொலை வழக்கில், மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று ஒன்றிய அரசு கூறுவது போல உள்ளது என்று குறிப்பிட்டனர். மேலும், ஆளு நரின் முடிவு மாநில அரசின் அதி காரத்துக்குள் வருகிறது என உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கருத்துத்தெரிவித்தனர். விசாரணையின்போது, பேரறி வாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவு தொடர்பான ஆவண நகலை உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.