states

கும்பல் கொலைகளில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

புதுதில்லி, ஜூலை 12 - கும்பல் படுகொலைகளுக்கு எதி ராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?  என்று ஒன்றிய மற்றும் மாநில அரசு கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யு மாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2014-இல் நரேந்திர மோடி தலைமை யில், ஒன்றிய ஆட்சியதிகாரத்தை பாஜக கைப்பற்றிய பின்னர், இந்தி யாவில் சிறுபான்மை சமூகத்திற்கு எதி ராக குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான கும்பல் வன்முறைகள், படு கொலைகள் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. பசுவைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரிலும், இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி கடத்துவதாக கூறியும், ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள், கும்பல் படுகொலைகளை அரங்கேற்றி வருகின்றன. 2018 ஜூலை 20 அன்று, ராஜஸ்தான் மாநிலம், ஆல்வர்  மாவட்டத்தில் அக்பர் கான் (28) என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்படவே, உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப் படவில்லை; மாநிலத்தின் அன்றைய  பாஜக அரசு தகுந்த நடவடிக்கை களை எடுக்கவில்லை என்று பத்திரிகை யாளரும், மகாத்மா காந்தியின் பேரனு மான துஷார் காந்தி மற்றும் காங்கிரஸ்  தலைவர் தெக்சின் பூனாவாலா ஆகி யோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.  கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகி யோர் அடங்கிய அமர்வு, “கும்பல் கொலைகளும், சட்டத்தை மக்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவதும் நீதித்துறையின் கோபத்துக்கு ஆளாக வழிவகுக்கும் என்பதை உணர வேண்டும்” என்று கடுமையாக எச்சரித்தது.

“எந்தவொரு தனிநபரோ அல்லது எந்தவொரு முக்கிய குழுவோ சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய முக்கியமான கடமை மாநி லங்களுக்கு உள்ளது. ஒவ்வொரு குடி மகனுக்கும் சட்டத்தை மீறுவது குறித்து தெரிவிக்க காவல்துறைக்கு உரி மை உள்ளது. தீர்ப்பு வழங்கும் செயல் முறையானது, புனிதமான நீதித்துறை யின் எல்லைக்குள் நடைபெற வேண்டுமே தவிர, தெருக்களில் நிகழக்  கூடாது; சட்டத்தின் பாதுகாவலராக மாற யாருக்கும் உரிமை இல்லை. கொலை கள் என்பது சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பின் உயர்ந்த மதிப்பு களுக்கு எதிரானது” என்று குறிப் பிட்டது. கும்பல் படுகொலைகளுக்கு எதி ராக தொலைக்காட்சி, வானொலி, பத்தி ரிகை ஆகியவற்றின் மூலமாக மக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில், கும்பல் படுகொலை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதி ராக, தெக்சின் பூனாவாலா தொடர்ந்த வழக்கு செவ்வாயன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பேலா திரி வேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “2018ஆம் ஆண்டு முதல், கும்பல் வன்முறை மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார்கள், பதவி செய்யப்பட்ட முதல்  தகவல் அறிக்கைகள் மற்றும் சலான்கள்  தொடர்பான ஆண்டு வாரியான தரவு களை தாக்கல் செய்யுமாறு” மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அத்துடன், மாநிலங் களில் சம்பந்தப்பட்ட துறை தலை வர்களை சந்தித்து, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரமாக சமர்பிக்குமாறு ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.